Wednesday, December 14, 2011

காதல் - ஒரு களஞ்சியம்

காதலர்கள் சில விஷயங்கள் செய்யும் போது ஏன் இப்படி எல்லாம் பண்றாங்கன்னு உங்களுக்கு தோனலாம்.  ஆனா, எல்லாத்துக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கு அத நீங்க எல்லாரும் தெரிஞ்சிக்கனும். 

காதலர்கள் ஏன் ஒரே ஐஸ்கிரீம் வாங்கி ரெண்டு பேரும் சாப்டுறாங்க? 
இந்த ஐஸ்கிரீம் மாதிரியே வாழ்க்கைல வர்ற சுகதுக்கங்களையும் ரெண்டு பேரும் ஷேர் பண்ணிக்கணும் என்ற எண்ணத்தில்.. 

காதலர்கள் ஏன் பைக்ல இடைவெளி இல்லாமல் நெருக்கமா உட்கார்ந்து போறாங்க?
சாலைகளில் வரும் மேடுபள்ளங்கள் போல வாழ்கையில் வரும் எல்லா சூழலிலும் உன் கூட இடைவெளி ஏற்படாம நெருக்கமாவே இருப்பேன் என்ற எண்ணத்தில்..

காதலர்கள் ஏன்  தியேட்டர்ல கடைசி ரோ சீட்ல உக்கறாங்க?
தியேட்டர் என்பது வாழ்க்கை போன்றது. இந்த வாழ்க்கையை கடைசிவரை (அதான் கடைசி ரோ) உன் பக்கத்திலேயே இருந்து நீ அழும்போது கண்ணீரை துடைத்தும், சிரிக்கும் போது உன்னை ரசித்தும் துணையாக இருப்பேன் என்ற எண்ணத்தில்..

காதலர்கள் ஏன் மொபைல்ல இருந்து எப்போ பாரு SMS அனுப்பிகிட்டே இருக்காங்க?
சில விஷயங்கள் வார்த்தையால் பேச கொஞ்சம் ஈகோ தடையா இருக்கலாம். இல்ல கூச்சமா இருக்கலாம். உதாரணதுக்கு மன்னிப்பு  முகத்துக்கு நேர கேக்க முடியாம இருக்கலாம். ஆனா, அத அப்படியே விட்டா காதலே கலாசலா ஆகலாம். SMS அனுப்பி மன்னிப்பு கேட்டுட்டு பிறகு நேர்ல மன்னிப்பு கேக்கும் போது புரிதல் பெருகும். காதல் வளரும்.



காதலர்கள் ஏன் சிறு சிறு பொய் கூறுகிறார்கள்?
எப்பேர்பட்ட அரிச்சந்த்ரன் கூட காதல்னு வந்துட்டா பொய் சொல்லித்தான் ஆகனும். சரி, மேட்டர்கு வரேன். காதலிக்கறவங்க பொய்யை எப்படி மெய்யுனு கண்மூடி தனமா நம்புவாங்களோ அதே போல உன்னுடனான வாழ்க்கை போராட்டத்தில் ஏற்படும் துன்பங்களையும் இன்பங்களாக நம்பனும். அப்படிங்கற ஒரு சம்பர்தாயம் தான்.

காதலிகள் மிஸ்டு கால்கள் மட்டும் ஏன் அடிகிறார்கள்? 
நான் உன்னை அடிச்சா, என்னை திருப்பி அடிக்க கூட உனக்கு மனசு வராது.. அட்லீஸ்ட் நான் அடிச்ச இந்த மிஸ்டு காலுக்கவது பதிலுக்கு ஒரு கால் அடிப்பன்னு ஒரு ஆசைல தான் இந்த மிஸ்டு கால் அடிகிறேன். என்ன சரிதானே, காதலிகளா!!

காதலர்கள் சண்டை போடுறாங்க.. அதுல என்னங்க அர்த்தம் இருக்க முடியும்?
இருக்கு... அர்த்தம் இருக்கு.. "போருக்கு பின் அமைதி" அப்படின்னு ஒரு பழமொழி போப் ஆண்டவர்ல இருந்து போதிதர்மர் வரை சொல்லிருகாங்க... அதை கடைபிடிச்சி.. அந்த அமைதியை அனுபவிபதற்காக..

காதலர்கள் ஏன் காதலர் தினம் கொண்டாடுகிறார்கள்? 
லவ்வுமா நல்வாழ்கையின் ஆரம்பம்ம்ம்.. அஸ்திவாரம்ம்ம்... அப்படின்னு சூப்பர் ஸ்டார்ரே சொல்லிருகாரு. அதுக்கு ஒரு தினம் கொண்டாடாம விட்டா எப்படிமா..

உங்களுக்கும் பொழுதுபோகலைனா காதல் பத்தி கேள்வி கேளுங்க.. அர்த்தம் கண்டுபிடிச்சி விளையாடலாம்.. வர்டா!! 

Thursday, November 10, 2011

டாக்டர்கள் காதலித்தால் - கவிதை தொகுப்பு

டாக்டர்கள் காதலித்தால் அவர்கள் கவிதை எப்படி இருக்கும்? இதோ இப்படி தான் இருக்கும்.

என் இதயத்தின் எக்ஸ்-ரே ரிப்போர்ட் -  உன் புகைபடம்!!

உடலில் உள்ள செல்கள் அனைத்திலும்  உன் அன்பை செலுத்தி என்னை வாழவைகிறாய் நீ!!

கத்தி இன்றி ரெத்தம் இன்றி என்னுள் இதயமாற்று அறுவை சிகிச்சை செய்தவள் நீ!

நீ நர்ஸாக இருந்தாலும் உன்னை என் இதயமென்னும் பர்ஸில் வைத்து தைத்திருகிறேன்!



 
இதயம் பார்கிறது, விழிகள் பேசுகிறது, உதடுகள் கேட்கிறது. ஒவ்வொரு உறுப்பும் அவற்றிற்கு மாறான பணியை செய்கிறதே! இது தான் காதல்நோயின் அறிகுறியோ!!

வெளிப்படுத்தபடாத காதல், சிரிஞ்சில் உள்ள மருந்தை போன்றது. வெளியே வரவில்லை என்றால் விரைவில் எக்ஸ்பயரி ஆகிவிடும்.

இதயதானம் வேண்டி உனக்கொரு கடிதம் எழுதினேன், என் இரத்தத்தை தானமாக்கி!!


Friday, October 28, 2011

நான்சென்ஸ் தத்துவங்கள் - படித்து பயனுறுக

வாழ்க்கைக்கு தேவையில்லாத நான்சென்ஸ் தத்துவங்கள். படித்து பயனுறுக!

காஞ்ச மரத்தை உழுக்கினாலும் அதிலிருந்து  இலைகள் உதிர்வதில்லை.

பக்கத்துக்கு வீட்டு பிகர் ஆர்ம்'ஸ் காட்டினாலும் அசருவது இல்லை.

சுத்தாத காத்தாடி காற்று தருவதில்லை.

உருகிய ஐஸ்கிரீம் மீண்டும் உருகுவது இல்லை.

ஜூஸ் மீண்டும் பழம் ஆவதில்லை, நுரை மீண்டும் சோப்பு ஆவதில்லை. 

மழைதரும் மேகம் மண்ணை தொடுவதில்லை.

குறி பார்த்து தலையில் எச்சம் போடும் காக்கா, அதற்கு ஸ்பெஷல் ட்ரைனிங் எடுப்பதில்லை.

இதேபோல நீங்க ஒன்னு மட்டும் நல்லா புரிஞ்சிக்கனும்... இந்த பதிவுல பயன் உருற அளவுக்கு ஒன்னும் உருப்படியா இல்லை.

Thursday, October 13, 2011

முதல் திருமணம் - படிபவர்களுக்கு தலைவலி இலவசம்


தலைப்ப பாத்துட்டு இலக்கிய இலக்கண பண்டைய காப்பிய மேட்டர் எதாச்சும் இருக்கும்னு வந்தீங்களா! உங்க ஜட்ஜ்மென்ட் ரொம்ப தப்பு! இந்த பதிவுல எனக்கு எப்படி முதல் திருமணம் நடந்ததுன்னு சொல்ல போறேன்.  ஆனா, நானும் இன்னும் பிரம்மச்சாரி தாங்க. கிளைமாக்ஸ் கொஞ்சம் செண்டிமெண்ட்டா இருக்கும் நீங்க அழக்கூடாது.

நான் சென்னையில் வலதுகால் வைத்த அந்த நாட்கள்ல இருந்து சொல்ல ஆரம்பிக்கறேன். சுமார் ஒரு 4 வருஷத்துக்கு முன்னாடி சென்னை ரயில்வே ஸ்டேஷனில் ஒரு சிங்கம் சுத்திட்டு இருந்ததுன்னு பிரபல பத்திரிக்கை தலைப்பு செய்தி வந்தது. உங்களுக்கு எல்லாம் அது மறந்திருக்கலாம். எனக்கு அது நல்லா நியாபகம் இருக்கு. நீங்களே சொல்லுங்க அந்த சிங்கம் அத எப்படிங்க மறக்கும்.  ஸ்டேஷன் விட்டு வெளிய வந்ததும் கலைந்திருந்த தலைய சூறாவளி வந்து சுத்தம் பண்ணிட்டு போச்சு... சரி சரி.. திரைகதை எல்லாம் சொன்னா பக்கம் பக்கமா போயிரும் படிக்கற நீங்க பாவம்னு நினைச்சி கதைய மட்டும் சொல்றேன். 

நான் வந்து 23 வது நாள் "வேலைக்கு ஆள்தேவை" பேப்பரில் இந்த விளம்பரத்தை பார்த்தேன். உடனே போன் பண்ணினேன். கிளம்பி அந்த டார்கெட்கும் போய் சேர்ந்தேன். அங்கதான் அந்த தேவதைய முதல் முறையா பாத்தேன். ச.. என்ன ஒரு அழகு.. இது கண்ணா இல்ல ஆளை பார்வைலையே சுடற கன்னா.. கட்டினா இவளை தான் கட்டிக்கனும்ன்னு வழக்கமான  டயலாக் ஒன்னு மண்டைல ஓடிட்டே இருந்தது. கடைசில தான் தெரிஞ்சது அவங்க தான் என்னை இண்டர்வியூவ் பண்ண போற HR ன்னு. உனக்கு கொடுத்து வச்சது அவ்ளோ தான்னு நினச்சிட்டு நல்ல பிள்ளையா இண்டர்வியூவ் முடிச்சிட்டு சோகமா போய்டேன்.

சில நாட்கள் கழிந்தது. நானும் அவளை மறந்துட்டேன், ஒரு நாள் அவளே எனக்கு போன் பண்ணி எங்கிட்ட பேசினா என் ரெஸ்யூம்ல இருந்து என் நம்பர் எடுத்திருப்பா போல கள்ளி!!!. நான் கொஞ்சம் பெர்சனாலிட்டியான பையன் தான் என்று இங்கு சொல்ல கடமை பட்டிருக்கிறேன். அப்படியே நான் அவளுக்கு போன் பண்ணி பேச ஆரம்பிச்சேன். நான் பேச அவ பேச இப்படியே ரெண்டுநாள் கொஞ்சம் பேசிட்டே இருந்தோம். 

அடுத்த நாள்  எனக்கு முதல் கல்யாணம் நடந்துச்சு. அந்த கதைய தெரிஞ்சிக்க  மேல படிங்க. அன்னைக்கு காலைல என்னை அவ ஆபீஸ் வர சொன்னா. நானும் அவள பார்க்க சந்தோசமா போனேன். போனதும் ஆபர் லெட்டர் கொடுத்து வேலைல சேர சொல்லிடாங்க. அந்த வேலை தான் என் முதல் மனைவி. அத தான் நான் முதல கல்யாணம் பண்ணிகிட்டேன்!!!!!! இங்கிலீஷ் படம் மாதிரி கதைல என்ன ஒரு ட்விஸ்ட் இல்ல. எழுதும் போது எனக்கே கண்ணீர் வந்துட்டு  ரொம்ப செண்டிமெண்ட் இல்லையா, அதான்.

பின்குறிப்பு: நானும் HR ம் போன்ல பேசிட்டு இருந்தோம்னு சொன்னேன் என்ன பேசினோம்னு  சொல்லாம விட்டுட்டேன் . வேற ஒன்னும் இல்ல வேலைய பத்தி தான். இத முதல்லையே சொல்லிருந்தா கதைல ஒரு விறுவிறுப்பு இருந்திருக்காது.


Wednesday, October 12, 2011

பில்கேட்ஸின் மாப்பிள்ளை ஆவது எப்படி?

பில்கேட்ஸின் மாப்பிள்ளை ஆவது என்ன சாதாரண விசயமா அவர மாதிரியே நாமளும் கஷ்டப்பட்டு யோசிச்சா தானே சக்ஸஸ் பண்ணமுடியும்.  எப்படியாவது பில்கேட்ஸ் மாப்பிள்ளை ஆகிறலாம்ன்னு ஷேக்ஸ்பியர் ஹாம்லெட்டோட ஏழாவது அத்யாயம்ல இருந்து எட்டாவது குறளை எடுத்து கூகிள்ல கொஞ்சம் விவரங்களை தேடி பிடிச்சி ஒரு மாஸ்டர் பிளான் ரெடி பண்ணிருக்கேன். இந்த பிளான் ரொம்ப ரகசியமா இருக்கோனும்.. இல்ல பிளாப் ஆகிரும். கண்டிப்பா இது பில்கேட்ஸ்க்கு தெரியகூடாது.



பிளான்;
பில்கேட்ஸ் கிட்ட போய் அவர் பொண்ண என்னக்கு கட்டி வைங்கன்னு கேப்பேன்.. அவர் கண்டிப்பா மாட்டேன்னு தான் சொல்லுவாரு. என்ன இருந்தாலும் அவரும் ஒரு பொண்ண பெத்தவரு தானே! நான் வேர்ல்ட் பேங்க் CEO ன்னு சொல்லுவேன் அப்போ அவர் சந்தோசமா ஒத்துப்பாரு.. அவரு கண்டுபிடிசிட்டா? அப்படின்னு நீங்க கேக்கலாம் அங்க தான் மாஸ்டர் பிளான் இருக்கு வேர்ல்ட் பேங்க் போய் என்னை CEO வா அப்பாயன்ட் பண்ணுங்கன்னு சொல்லிருவேன்.. அவங்க கண்டிப்பா மாட்டேன்னு தான் சொல்லுவாங்க. நான் பில்கேட்ஸ் மாப்பிளை  என்னையே அப்பாயன்ட் பண்ண மாட்டியான்னு தமிழ் பட வில்லன் ரேஞ்சுக்கு சௌண்டா கேப்பேன் . அவங்களும் மரியாதைல அப்பாயன்ட் பண்ணிருவாங்க.  அப்பறம் என்ன பொண்ணும் கிடைச்சிட்டு வேர்ல்ட் பேங்க் CEO வாவும் ஆயாச்சு.. இனி கெட்டிமேளம் தான்!!

பின்குறிப்பு: 
ஏற்கனவே இந்த SMS எங்களுக்கு வந்துட்டுன்னு யாரும் கமென்ட கூடாது.

Monday, October 3, 2011

சண்டே குளிக்காதீங்க - இத முதல்ல படிங்க

சண்டே குளிச்சா பல பிரச்சனைகள் லைப்ல வருது என்பது பலர் அறியாத உண்மை.. எப்படின்னு கேட்கிறீங்களா கீழபடிங்க நீங்களே ஒத்துபீங்க.

சண்டே குளிச்சா வெளிய போகலாம்ன்னு தோனுது, வெளிய போன எந்த பிகரையாவது  சைட் அடிக்கலாம்னு தோனுது, சைட் அடிச்சா அப்படியே கொஞ்சம் சிக்னல் காட்டலாம்னு தோனுது, சிக்னல் வந்தா அப்படியே கொஞ்சம் பேசலாம்ன்னு தோனுது, அப்படியே பேச ஆரம்பிச்சா கடலை போடலாம்னு தோனுது, கடலை போட்டா அப்படியே நெக்ஸ்ட் சண்டே ப்ரீயான்னு கேக்க தோனுது, ப்ரீன்னு சொன்னா வெளிய போகலாமான்னு கேக்க தோனுது, எங்க போகலாம்னா பீச்க்கு போகலாம்ன்னு தோனுது, பீச் போன பைக்ல தான் போகனும்னு தோனுது, பைக்ல போன சடன் பிரேக் போடனும்னு தோனுது, அங்க போன அவ ரசிக்கிறதை எல்லாம் நாமளும் ரசிக்கனும்னு தோனுது, அப்படியே ரசிச்சா அதுக்குள்ள டைம் ஆகிடுச்சானு தோனுது, அப்படியே ட்ராப் பண்ணும் போது நெக்ஸ்ட் சண்டே சினிமா போலாமான்னு கேக்க தோனுது, அப்படியே போனாலும் நல்ல ரொமாண்டிக் மூவிக்கு போகலாம்ன்னு தோனுது, அப்படியே மூவி போனாலும் படத்த பாக்காம அவளை பாக்கலாம்னு தோனுது, படம் முடிஞ்சதும் அப்படியே  ஐஸ்கிரீம் பார்லர் போலாம்ன்னு தோனுது, கடைகாரர் நீங்க கேட்ட ப்லேவர் ஒன்னே ஒன்னுதான் இருக்குனு சொல்லனும்னு நினைக்க தோனுது, அவளும் "இட்'ஸ் ஓகே ஒன்ன ரெண்டுபேரும் ஷேர் பண்ணிக்கலாம்"ன்னு சொன்ன நன்னா இருக்கும்னு தோனுது, அப்பறம் அன்னைக்கு நைட் எல்லாம் ஒரே கவிதையா தோனுது, கடைசில இது தான் லவ்வோன்னு தோனுது, அடுத்தநாள் அவகிட்ட ப்ரபோஸ் பண்ணிடலாம்னு தோனுது, ஆனா பாருங்க அவ மட்டும் ஒத்துகிட்டா லைப்லாங்  கஷ்டம்னு மட்டும் தோனவே மாட்டிகுது.



இதெல்லாம் தேவையா? பேசாம சண்டே குளிக்கமா ஒரு ஓரமா மூடிகிட்டு தூங்கினா இந்த பிரச்சனை எல்லாம் வருமா..யோசிங்கபா.. நல்லா யோசிங்க o:

Saturday, September 17, 2011

ஒரு பெண்ணிடம் நேர்காணல்


எனக்கு பொழுதுபோகலை அதனால ஒரு பெண்ணிடம் சில கேள்விகள்  கேட்டேன். அவங்களுக்கும் பொழுதுபோகலை அதனால பதில் சொன்னங்க..  உங்களுக்கும் பொழுதுபோகலைன்னா இத படிங்க..

கேள்வி: மிஸ். உஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நீங்க எத்தனை வருசமா மிஸ்.உஷாவா இருக்கீங்க?
பதில்: பிறந்ததில் இருந்தே மிஸ் உஷா தான். 
(பெண்களால் ரசசியத்தை காக்கமுடியாதுன்னு யார்யா சொன்னா.. அவங்களோட  உண்மையான வயச சாகும்வரை ரகசியமாவே வச்சிருபாங்கலாம். அதற்கு இது ஒரு சாம்பிள்.)

கேள்வி: வருங்கால அமெரிக்க ஜனாதிபதி உஷா.. இந்த வாக்கியத்துல எத்தனை உண்மை இருக்கிறது?
பதில்: அது உறுதியா தெரியல.. ஆனா, சிறந்த குடும்பத்து குத்துவிளக்கு, நல்ல மருமகள், அன்பான மனைவி இப்படி சில பதவிகள் எல்லாம் கண்டிப்பா உண்டு.

கேள்வி: உங்க பிளஸ் என்னது?
பதில்: என்னோட  உயரம் 5.8. கூட்டத்துல கூட சைட் அடிக்க வசதியா இருக்கு.

கேள்வி:  நீங்க சைட் அடிக்கறத எதாவது அறிகுறி வச்சி தெரிஞ்சிக்கலாமா?
பதில்: எதோ முக்கியமான வேலைக்காக தான் உங்க பக்கம் திரும்பற மாதிரி நடிப்போம்.. ஆனா, அக்சுவலி அது சைட் தான்.. ஆஸ்கார் அவார்ட் வாங்கின நடிகர்களே தோத்து போயிருவாங்க.

கேள்வி: ஏன் எல்லா பொண்ணுகளும் தங்களை ஒரு உலகஅழகி ரேஞ்சுக்கு பீல் பண்றீங்க?
பதில்: நான் அப்படி பட்ட பொண்ணு இல்லை.

கேள்வி:  பசங்க என்ன பண்ணினா தான் நீங்க லவ் பண்ணுவீங்க?
பதில்: ஒரு தடவை முடிவு பண்ணிட்ட எங்க பேச்சை நாங்களே கேக்க மாட்டோம். அதாவது, லவ் பண்ண கூடாதுன்னு முடிவு பண்ணிட்ட லவ் வந்தா கூட வெளிய சொல்லமாட்டோம்.. (தெளிவா குழப்பிடாங்கன்னு மட்டும் தெரியுது)

கேள்வி: "பாய்ஸ்" ரெண்டே வார்த்தையில் சொல்லுங்க? 
பதில்: பசங்க இல்லைனா பொண்ணுங்க லைப்பே போர். அஞ்சு வார்த்தை வந்துட்டு அட்ஜஸ்ட் பண்ணிகோங்க (இந்த பதிலுக்கு உங்களுக்கு அவார்ட் கொடுக்கலாம்)

கேள்வி: இன்றைய தலைமுறை பசங்களுக்கு நீங்க ஏதாவது அட்வைஸ் சொல்ல ஆசைபடுறீங்களா?
பதில்: அட்வைஸ் பண்ற அளவுக்கு பசங்க கெட்டு போய்டாங்களா... நீங்க நீங்களா இருங்க நாங்க நாங்களா இருக்கோம். பால்கோவான்ன இனிக்கனும் பாவக்காய்ன்னா கசக்கனும்..

கேள்வி: உங்களை ஒருத்தன் கரெக்ட் பண்ண பாக்கறான்.. அத தெரிஞ்சா என்ன செய்வீங்க?
பதில்: அட்வைஸ் பண்ணுவோம்.. அவன் பக்கதுல வரதுக்கே பயப்படற அளவுக்கு அட்வைஸ் பண்ணுவோம்.

கேள்வி: உங்கள் வாழ்க்கை லட்சியம்? 
பதில்: pass

கேள்வி: பெண்களை உண்மையா காதலிக்கற பசங்களுக்கு என்ன சொல்ல விரும்பறீங்க?
பதில்: பொண்ணு ஒத்துகிட்டா பாருங்க.. இல்லாட்டி உங்களுக்கு ஆயிரம் பிகர் மடியும் மச்சி..

கேள்வி: உலகத்துல பசங்க எல்லாரும் ஓவர்நைட்ல சாமியாரா போய்டா என்ன பண்ணுவீங்க? 
பதில்: பிரியாணி சாப்ட்டு ப்ரீயா தூங்குவோம்.

கேள்வி: உங்க பெட்ரூம்ல ஒரு மெழுகுசிலை வைக்கறதா இருந்த அது யாரோட சிலையா இருக்கும்?
பதில்: கல்யாணம் முடியும் வரை சூர்யா.. கல்யாணத்துக்கு பிறகு கல்லானாலும் கணவன்.


லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்

கேள்வி: தமிழ்ல உங்களுக்கு பிடிக்காத ஒரே வார்த்தை?  
பதில்: அரசியல். ஏன்னா, எனக்கு அரசியல் தெரியாது.. இத்துனூண்டு கூட..



Thursday, August 4, 2011

அன்ப பத்தி எல்லாம் கவிதை - என் நிலைமைய பாத்தீங்களா!!

இந்த பதிவு முழுவதும் அன்பை மையமாக கொண்டு எழுதப்பட்டது..

ரசிகன்
உன் அழகிற்கு ஆயிரம் ரசிகர்கள். உன் அன்பிற்கு நான் மட்டுமே ரசிகன்.

மண்புழு நான்
உன் அழகென்னும் பூவை சுற்றி வரும் தேனீ  நானல்ல. உன் இதயமெனும் வேரில் இதமாய் இருக்கம் மண்புழு நான்.

இதயதராசு
என் இதயதராசில் உன் அன்பிற்கு இணையாக.. அஸ்வர்யாராய், அனுஷ்கா, அமலாபால் இவர்களை வைத்து பார்க்கிறேன். துளியும் உயரவில்லை உன் பக்கம்!!




உன் மூச்சு காற்று
உன் அழகை தொட்டு செல்லும் காற்றை விட, நீ மூச்சாக விட்டு செல்லும் காற்றையே சுவாசிக்க விரும்புகிறேன்.. அது உன் இதயத்தை உரசி வந்ததால்!! 

குழந்தை நீ
இதனை வயதான பின்னும் தவழ்கிறாயே என் இதயத்தில்,  அங்கு என்றுமே  நீ குழந்தை தான் என்பதை மூளை சொல்லி தான் என் இதயத்திற்கு தெரியவேண்டும் என்பதில்லை!!

அழியா காதல்
கண் பார்த்து மனம் தேடுவது முதல் காதல், மனம் பார்த்து கண் தேடுவது கடைசி காதல். அதுவே என்றும் அழியா காதல்!

உறவின் அணிகலன்
நம்மை ஆதாரமாக்கி ஈகோவை சேதாரமாக்கி அன்பை செயகூலியாக்கி செய்யப்படும் விலைமதிப்பற்ற  உறவின் அணிகலனே காதல்!

லப், டப்
இதயம் பேசிய ரெண்டே வார்த்தை லப், டப். மூன்றாவதாக இப்பொழுது இன்னொரு வார்த்தை உன் பெயர்..! 

அன்பு காந்தம்
உன் அன்பென்ன ராட்சத காந்தமா? நான் எங்கிருந்தாலும் என்னை உன் பக்கமாகவே ஈர்க்கிறது..!

Thursday, July 14, 2011

கடைசில என்னையும் கவிஞன் ஆகிட்டாங்களே - கவிதை தொகுப்பு (பகுதி -2)

சிரிப்பின் ஒலி.
ஒவ்வொரு நரம்பிலும் அதிர்ந்து கொண்டிருக்கிறது.. நீ சத்தமின்றி சிரித்த சிரிப்பின் ஒலி.

நீ பேசுகிறாய்
நீ என்னிடம் ரகசியமாய் பேசும் வார்த்தைகளை ஒட்டுகேட்கவே நம்மருகில் வருகின்றன வண்ணத்துபூச்சிகள்.



கடன் கொடு
ஒரு முத்தமாவது கடனாக கொடு. கண்டிப்பாக வட்டியோடு திருப்பி தருகிறேன்.!

தென்றல் காற்றே
தென்றலுக்கும் கூட பொறாமை இருக்கும். எங்கள் நெருக்கத்தில் அதற்கு கூட இடம் இல்லையே! 

நீ இருக்கமாட்டாய் தென்றலே
என்னவளின் பூவிழியில் தூசு இட்ட தென்றலே. என் கண்ணில் பட்டுவிடாதே! பின் யாரும் ரசிக்க நீ இருக்க மாட்டாய்!

நீ கள்ளியடி
நமக்குள் இடைவெளி தேவை என்று கூறி, நீ என் விரல்களை இறுக பிணைப்பதே நீ பொய்யாக கூறியதை கட்டவிழ்த்து விடுகிறது. 

தனிமை 
தனிமையை என்றும் உணர்ந்ததே இல்லை. உன்னை சந்திக்கும் வரை.!!

தேன் கொடு
தேனீக்கள் உன் உதட்டை வட்டமிடுகிறதே.. அவைகளுக்கும் தேன் வேண்டுமாம்!!



Monday, July 11, 2011

சப்பை பிகரும் பிகரே!! - கவிதை தொகுப்பு

இது வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்பட்டது. யாரையும் காயபடுத்த அல்ல. சும்மா உலுலுலுலாய்க்கு. உலகில் எல்லா பெண்களும் அழகே!!

எத்தனை நாள் தான் அழகான பிகருங்களுக்காகவே கவிதை எழுதுறது. சப்பை பிகருங்களையும் கவனிச்சு கவிஞர்கள் கவிதை எழுதவேண்டும். என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த தொடக்கம்.. நானே இந்த பதிவின் மூலம்  பிள்ளையார் சுழி போடுறேன்.

கொலு கொளு பொம்மைகள்
உங்கள் வீட்டிலே கொலு வீற்றிருக்கும் கல் பொம்மைகள் அருகில் செல்லாதே.. அவையும் உன்னை கண்டு கொலுவில் இருந்து ஓடிவிடலாம்! 

சப்பை
நீ தான் சப்பை என்று நினைத்திருந்தேன்.. இல்லை.. உன் மூக்கு உன்னை விட சப்பை.. !

நரக வேதனை
தினமும் உன் சிரிப்பில் அழும் உன் அறை கண்ணாடியை விட நரக வேதனையை அனுபவிக்கும் பொருளும் உலகில் உண்டோ!!! 


உன்னை தேடி 

மிருககாட்சிசாலையின் பக்கம் தவறியும் சென்றுவிடாதே!! அங்கே ஒரு கொரிலாகுரங்கு ஜோடி தேடி அலைகிறதாம்!! 



உன் புகைபடம்
என் வாகனத்தின் முன் எலுமிச்சைபழம், திருஷ்டிக்காக. எனக்கோ அது எனக்கு தேவை இல்லை.. என்னிடம் இருக்கிறது உன் புகைபடம்!! 

பிழைத்தது என் கண்கள்
அதோ அங்கே ஒரு எருமை கூட்டம்.  அங்கே உன்னை அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் தப்பித்து பிழைத்தது என் கண்கள்.. !

நட்சத்திரங்கள்
நீ பார்த்து இளிததும் சுக்குநூறாக உடைந்த நிலாவின் சில பாகங்களே  நட்சத்திரங்கள்.. !

முத்தம் ஒரு குத்தம்
முத்தம் ஒன்று நீ கேட்டால்,  சத்தம் இன்றி போகும் அதை காதால் கேட்டவனின்  உயிர்..!

உன் பார்வை  
இனி யாரையும் பால் ஊற்றி கொல்லவேண்டாம்.. உன்னை ஒரு நிமிடம் பார்க்க வைத்தாலே போதும்.. !

ஒளிந்து கொள்ளும் இதயம் 
உன்னை காணும் வரை லப்டப் என சீராக துடிக்கும் இதயம், உன்னை கண்டதும்  ஓடி சென்று என் முதுகின் பின்னே சென்று ஒளிந்து கொள்கிறது. !!

அணு ஆற்றல்
அணுவை துளைத்து ஆற்றல் எடுத்தால் கதிர்வீச்சு. உன்னை காணும் நாள் எல்லாம் எனக்கு நாசமா போச்சு..!!

சப்ப பிகருக்காக சப்ப கவிதைகள் எழுதியாச்சு..   இது வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்பட்டது. "எல்லா புகழும் இறைவனுக்கே!!" ஏ.ஆர் ரகுமான் சொன்னது. "எல்லா பெண்களும் அழகே!!" இது நான் சொன்னது.



Saturday, July 2, 2011

இது ஒரு காதல் கடிதம்

அன்புள்ள என்னுயிர் தோழிக்கு, 

உனக்கு காதல் கடிதம் எழுதலாம் என்று எழுத ஆரம்பித்து விட்டேன்.. ஆனால், என்ன எழுதுவது என்று தெரியவில்லை. உன்னை காதலிக்க சொல்லி இந்த கடிதத்தை நான் எழுதவில்லை. என் இதயம் அமர்ந்த உனக்கு என் காதலை தெரியபடுத்தவே இதை எழுதுகிறேன்.  உன்னை எப்படி காதலிதேன் என்பதும் எனக்கு புரியவில்லை. நீ என்னை காதலிக்கிறாயா என தெரியவில்லை. நீ என்னோடு இல்லை என்றாலும் நீ என்னை காதலிக்கவில்லை என்றாலும் எனக்கு கவலை இல்லை. நீ சென்ற பாதையில் என்றாவது நடப்பேன் என்று நடையாய் நடக்கிறேன்.. நீ சுவாசித்த காற்றை நான் என்றாவது சுவாசிபேன் என்ற எண்ணத்தில் நான் இப்போதும் சுவாசித்து கொண்டிருக்கிறேன். 


நீ இட்ட கோலம் கண்டேன், ரசித்தேன்.  நீ சூடி அழகேற்றிய மலர் கண்டேன், மெய் சிலிர்த்தேன். உன் மூக்கில் அமர்ந்திருக்கும் மூக்குத்தி கண்டேன், உன் பெண்மையை ரசித்தேன். உன் காதுகளில் அலங்காரமாய் கம்மல் கண்டேன், ஏனோ அவைகளை பழித்தேன். ஏனோ, உன்னை மட்டும் இதுவரை முழுதும் காணாமல் இருந்து விட்டேன். உன்னை நித்தமும் காண முயல்கிறேன். நீ என்னுள்ளே இருந்தாலும் என்னருகே அமர்ந்தாலும் என்னோடு நடந்தாலும் எனக்கு தெரிவது உன் உள்ளத்தின் உருவம் மட்டுமே!

உன்னை ஒவ்வொரு நாளும் சுற்றி வந்ததாய் பெருமைபடும் சூரியனை போல நானும் ஒவ்வொரு நாளும் உன் வார்த்தைகள் என்னை சுற்றி வருவதை கண்டு நிதம் மகிழ்கிறேன். நீயோ என்னிடம் பிடித்தவைகளை பேசுகிறாய். ஆனால், எனக்கோ உன்னிடம் பேசிகொண்டிருப்பதே பிடித்து போய் விட்டது. அன்றொருநாள் கனவில் "பார்க்காமலே காதலிக்கிறப் பழக்கம் மீன்களுக்குண்டு" என்கிறேன். அதை கேட்டு அதிசயித்து கண்களை உருட்டினாய். "சந்திக்காத காதல் மீன்கள் இரண்டும் ஒன்றுபோல உருள்கின்றன" என்று நான் எனக்குள்ளேயே நினைத்து கொண்டேன். எத்தனை கவிதை எழுதியும் படித்தும் உன்னை வர்ணிப்பதில் திருப்தி அடையாதவனகவே இருக்கிறேன்.

எனக்கு காதல் கடிதம் எழுதி அனுபவமில்லை.. ஏதோ, என்னுள்ளான உன் நினைவுகளை இங்கே எழுதி இருக்கிறேன். பிடிக்கவில்லை எனில் கசக்கி எரிந்துவிடாதே!! இதயத்தை தான் வைத்து கொண்டாய், இதையாவது என்னிடம் திருப்பி கொடுத்துவிடு! என்னிடம் இருக்கும் உன் நினைவுகளில் ஒன்றாக இதையும் பத்திர படுத்திகொள்கிறேன்.
இப்படிக்கு,
அன்புள்ள தோழன்..

இத படிச்சி புட்டு யாரும் எனக்கு எழுதிகொடுங்க எனக்கு எழுதிகொடுங்கன்னு  தொல்லை பண்ண கூடாது.. நான் ரொம்ப பிஸி...

Friday, June 24, 2011

இணையத்தில் இரு வருடம் - நகைச்சுவை ஆனால் உண்மை


இத்தனை நாட்களாக இணையத்தில் சுற்றி திரிகிறேன்.. அப்படி என்ன தான் பண்ணுகிறேன்? கேளுங்கள் என் ஸ்டோரியை...

பதிவுலகம் விசித்திரம் நிறைந்த பல பதிவுகளை சந்தித்திருக்கிறது  புதுமையான பல மொக்கைகளை தந்திருக்கிறது. ஆனால், இந்த பதிவு ஒன்றும் உருப்படியானது அல்ல.. பதிவு எழுதும் நான் ஒன்றும் வெட்டிபையன் அல்ல.. பரந்து விரிந்த இந்த இணைய உலகத்திலே உலாவிகளிலே சர்வ்வ்வ்வ சாதாரணமாக உலாவி வந்த ஜீவன்களிலே நானும் ஒருவன். 

பேஸ்புக்கில் அத்துமீறி நுழைந்தேன். ட்விட்டர்ரில் காலடி வைத்தேன் ப்ளாக் எழுத்து கொண்டிருக்கிறேன் இப்படியெல்லாம்  ஏன் ஏதாவது உருப்படியா பண்ணலாம் என்றா !! இல்லை.. . நிச்சமாக இல்லை...

Wednesday, June 8, 2011

கடைசில என்னையும் கவிஞன் ஆகிட்டாங்களே - கவிதை தொகுப்பு

நீ ஒரு புதிர்
விலகி சென்றால் அணைக்கிறாய்.. நெருங்கி வந்தால் தடுக்கிறாய்.. உன்னை புரிந்து கொள்ள உனை படைத்த பிரம்மனாலும் இயலாது. 

பாவையின் பார்வை
உன் கண்கொண்டு வைரங்களை பார்க்காதே, அவையும் தன்னை மறந்து ஒளிராமல் இருந்துவிடும்.

ஏக்கம் 
உன் வீட்டு ரோஜா செடியின் மொட்டுகளிடம் கேட்டேன். ஏன் மலரவில்லை என்று. அவையும் தன் இதழ் குவித்து உன்னை முத்தமிட காத்து கொண்டிருகின்றனவாம்!!


சிதறிய நட்சதிரங்கள்
வானில் சிதறி கிடக்கும் நட்சதிரங்கள் கூட நீ வெட்டும் போது சிதறிய உன் நக துண்டுகளுக்கு ஈடாகாது!

Tuesday, May 31, 2011

காதலை சொல்ல ஆயிரம் வழி, அதில் இது தனி வழி

ரமேஷ், சுரேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இருவரும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் ஒரே நிறுவனத்தில் தான் வேலை செய்து வந்தனர். அதே நிறுவனத்தில் வேலை செய்து வந்த வள்ளியை (பெயர் மாற்றப்படவில்லை. ஏன்னா இந்த கதைல ஒரு பாட்டு இருக்கு. அதுக்கு அந்த பேரு வேணும்) இருவருக்கும் நன்றாக தெரியும். வள்ளி அழகான, புத்திசாலியான பொண்ணு  சுருக்கமா சொன்ன "சூப்பர் பிகரு"  ரமேஷ்க்கு வள்ளி மேல் காதலோ காதல். சுரேஷ்க்கு ரமேஷ் வள்ளிய காதலிக்கிறது தெரியும். தினமும் கவிதைங்கிற பேருல சுரேஷ் காதுல்ல கடப்பாறைய இறக்குவான்.
 
 
இப்படியே ஒரு 6 மாதம் போச்சு. "இந்த காதலர் தினத்துல என்னோட காதல வள்ளிகிட்ட சொல்லபோறேன்" ன்னு ரமேஷ் சுரேஷ் கிட்ட சொன்னான்.  அதகேட்ட சுரேஷ் ரமேஷ்க்கு வாழ்த்துக்கள் சொல்லி அவன உற்சாக படுத்துனான். 

அந்த காதலர் தினமும் வந்தது ரமேஷ் டிப்டாப்பா கைல ஒரு ரோஜா வச்சிக்கிட்டு வள்ளிய எதிர்பாத்து காத்துகிட்டு இருந்தான் (வள்ளிவரபோற... துள்ளிவரப்போற இந்த இசை பின்னணில ஒலிச்சிகிட்டே இருந்தது). வள்ளி வந்தாள். அவள் ரமேஷிடம் பேசகூடவில்லை. ரமேஷ் துவண்டு போனான். இரவெல்லாம் தூக்கமில்லை ஒரே புலம்பல்.
 
ஏன் வள்ளி ரமேஷை ஒதுக்குறான்னு விசாரிச்சதில். எல்லாத்துக்கும் காரணம் இந்த சுரேஷ் என்ன்பது தெரிந்தது. சுரேஷ் காதலர் தினத்துக்கு முந்தயதினம் வள்ளியை வெளியே பார்த்திருக்கிறான். பார்த்ததோடு இல்லாமல் அவளிடம் சென்று "I Love You" ன்னு சொல்லி இருக்குறான் படுபாவி. வள்ளியோட ரியாக்சன் மாறிட்டு, உடனே அந்த பய புள்ள "நான் இல்லை ரமேஷ் சொல்ல சொன்னான்" ன்னு சொல்லி இருக்குறான். வள்ளியோ ரமேஷ் என்னைவிட சின்னபையன் எனக்கு தம்பி மாதிரின்னு சொல்லிட்டு போய்டாலாம்.
 
ரமேஷோ மனமுடைந்து போயிட்டான். ரமேஷை எப்படி இதை தாங்க போறானோ தெரியல. அட  நமக்கு அதுவா முக்கியம், சுரேஷின் ஐடியா நல்லா இருக்குது அதுதான் முக்கியம்
 
ஓட்ட போடுங்க. திட்ட ஆசை படுறவங்க கமெண்ட் போட்டு திட்டலாம்.

Thursday, May 19, 2011

ஒரு தேவதையின் வரிகள் - கவிதைகளின் தொகுப்பு

என்னக்குள் ஓர் அரியாசனம்
'சுற்றமும் நட்பும்' எண்ணற்றோர், பெரும்பான்மை. நீ ஒருவன், சிறுபான்மை. என்னை ஆட்சி செய்ய உன்னை தேர்ந்தெடுத்தேன். பதவி ஏற்றுக்கொள்.


உள்ளத்தில் பெருமழை
ஒரே குடைக்குள் நாம் இருவரும் இணைந்து நடக்க, இந்த பெருமழை ஒரு காரணியல்ல! வெறும் காரணம் மட்டுமே....!!



காதல் நூல்
நட்புக்கும், காதலுக்கும் ஒரு நூல் இடைவெளி உண்டு. அந்த நூலை எடுத்து அதில் வண்ணமலர்கள் கோர்த்து கையில் தந்து சிரித்தாய் நீ!


அழகு
காதல் கவிதைகள் எழுதுவதில் ஆண்கள் அழகு! கவிதையாய் காதலிப்பதில் பெண்கள் அழகு!!

உனக்காக...
விடை பெற்று செல்லும்போது திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே செல்கிறேன்... நீ விரும்பி பார்த்துக்கொண்டேயிருப்பாய் எனத் தெரிந்து! 

என் சொந்தம்
எழுதிய வரிகளை படித்து உன் இதழோரம் புன்னகை பிறக்குமோ! விழியோரம் ஒரு துளி நீர் உதிர்க்குமோ!! எதுவாயினும் அது என் சொந்தம்


அன்பின் முத்துகள்
நீ பிறந்தநாள் பரிசாக தந்த கொலுசின் முத்துக்களில் ஒன்றும் உதிராமல் இருக்க வேண்டி, அதிராமல் நடக்கப் பழகினேன் நான்! 


என் பொருள்  நீ
மென்பொருளோ, வன்பொருளோ உன் பணி பற்றி ஏதும் அறியேன் நீ ''என்' பொருள்'' என்பதை தவிர!


மின்னும் அஞ்சல்
தினம் வரும் மின்னஞ்சல்களில் உன் பெயர் இல்லாவிடில் மற்றவையும் படிப்பதில்லை. உன் அஞ்சல் இருந்தால் மற்றவை படித்தாலும் புரிவதில்லை. 


இவை அனைத்தும் என்னுடைய படைப்புகள் இல்லை... உரியவரின் அனுமதி பெற்றே பதிவிட்டு இருக்கிறேன்.

எவ்வளவோ படிச்சிடீங்க இதையும் படிங்க...

இது ஒரு கதை அவ்வளோதான். இது ஒரு நகைச்சுவைக்காக எழுதபட்டது தான். 

அமெரிக்க வெள்ளை மாளிகையின் மேற்கூரையில் பெரிய ஓட்டை விழுந்து விட்டது. அதை சரி பண்ண ஜப்பான், சீனா, இந்தியா ஆகிய 3 நாடுகளிடம் இருந்து அரசியல்வாதிகள் வரவழைக்க பட்டிருந்தார்கள். 

ஜப்பான் அரசியல்வாதிகள் சேதத்தை டேப்  வைத்து அளந்து விட்டு சில பல கணக்குகள் எல்லாம் போட்டு $900 செலவாகும்ன்னு சொன்னாங்க ( $400 மெடீரியல்களுக்கு $400  டீம்க்கு $100 லாபம்).

சீன அரசியல்வாதிகளும் அதேமாதிரி அளந்து பாத்து கணக்கு போட்டு $700 செலவாகும்ன்னு சொன்னாங்க ($300 மெடீரியல்களுக்கு $300 டீம்க்கு $100 லாபம்)

இந்திய அரசியல்வாதிகள் வந்தாங்க ஒன்னும் அளந்தும் பாக்கல கணக்கும் போடல அமெரிக்க அதிகாரிகளை மேலயும் கீழயும் பாத்துட்டு அவங்களுக்குள்ளயே குசு குசு ன்னு பேசிட்டு $2,700 செலவாகும்ன்னு சொன்னங்க.

அமெரிக்க அதிகாரிகள், "அளந்தும் பாக்கல கணக்கும் போடல $2,700 ன்னு சொல்றேங்களே"ன்னு சொன்னாங்க. இந்திய அரசியல்வாதிகள் அவங்க காதுல  "$1000 எங்களுக்கு $1000 உங்களுக்கு வேலைக்கு சீனாவில் இருந்து ஆட்களை எடுத்துகளாம்"ன்னு சொன்னாங்க 

டீல் நல்லா இருந்ததால அமெரிக்க அதிகாரிகள் இந்திய அரசியல்வாதிகளுக்கு வேலைய கொடுத்துட்டாங்க. இதுக்கு பேரு தான் பிசினஸ் டாக்கிஸ்.



Monday, May 9, 2011

ட்விட்டர், பேஸ்புக்கை விட்டு விட்டு உருப்பட சில யோசனைகள்

வேலை வெட்டிய விட்டுட்டு சொந்த கேர்ள்பிரெண்ட்டை கூட விட்டுட்டு ட்விட்டர், பேஸ்புக் -ல் குடும்பம் நடத்துபவரா நீங்கள் உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். இதிலிருந்து விடுபட உங்களுக்கு சில யோசனைகளை கூறுகிறேன்.


  1. முதலும் முடிவுமாக நீங்கள் செய்யவேண்டிய வேலை நீங்கள் ஆணாக இருந்தால் இதிலுள்ள பெண்கள் சகவாசத்தையும், பெண்கள், ஆண்கள் சகவாசத்தையும் கலட்டிவிடுவது மிகுந்த பயனை தரும். 
  2. இதுலயே மூணு நாள் மூச்சி விடாம  இருந்தீங்கன்னா... இதுல மட்டும் இல்ல உங்க வாழ்கையில் உள்ள எல்லா பிரச்சனைகளில் இருந்தும் விடு பட்டு விடலாம். (உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தா பிளாஷ் நியூஸ்ல கூட வரலாம்... )
  3. ஒவ்வொரு முறை logout செய்யும் போதும் நீங்கள் உபயோக படுத்திய கணினியை அடித்து நொறுக்குவதன் மூலம் இதிலிருந்து சுலபமாக விடுபடலாம்
  4. ஒவ்வொரு முறை login செய்யும் போதும் உங்கள் தலையை சுத்தியல் கொண்டு சிறிது ரெத்தம் வருமளவு மெதுவாக "நங்." என்று அடிக்கவும். ரெத்தம் வரவில்லை என்றால் " நங் நங்.." என்று அடிக்கவும். இன்னும் வரவில்லை என்றால் "நச்சு"ன்னு ஒரே போடு போடவும். 
  5. "ட்விட்டர், பேஸ்புக் -ஐ  விட்டு விட்டு உருப்படுவோர் சங்கம்" அப்படின்னு ட்விட்டர்ல ஒரு hashtag -ம் பேஸ்புக்கில்  ஒரு group -ம் உருவாக்கி உருப்படலாம்.   
இதை மற்றவர்களுக்கும் சென்றடைய செய்து அவர்களும் உருப்பட உதவ வேண்டுகிறேன் . (ஓட்டு போடுங்க)

Friday, May 6, 2011

த்ரிஷாவுக்காக... ஒரு ரீமிக்ஸ்




மண்ணானாலும் திரிஷா தலையில் மண்ணாவேன் (களிமண்ண சொன்னேன்)
ஒரு மரமானாலும் திரிஷா தோட்டத்து மரமாவேன் 
ஒரு கல்லனாலும் திரிஷா குளியலறை கல்லாவேன்  
ஒரு புல்லானாலும் திரிஷா அடிக்கும் புல்லாவேன். நான் ...

(மண்ணானாலும்) 

பொன்னானாலும்  திரிஷா கழுத்தில் செயின் (கொஞ்சம் நீளமான செயின்) ஆவேன்
பனி பூவானாலும்  திரிஷா தலையில்  பூவாவேன்
தமிழ் பேச்சானாலும்  திரிஷா புகழ் பாடும் பேச்சாவேன்
மனம் தெளிவானாலும்  திரிஷா அருளால் பித்தவேன்.  நான் ...

(மண்ணானாலும்) 

ஒரு சொல்லானாலும்  திரிஷா என்றொலிக்கும் சொல்லாவேன்
பழச்சுவையானாலும்  திரிஷாவுக்கு சுவையாவேன்
நீ உண்டானாலும் அதுக்கு நானே முதலாவேன்
நீ தண்ணி அடித்தாலும் அதுக்கு நானே சைடுடிஷ் ஆவேன். நான்....(மண்ணானாலும்) 

Monday, April 18, 2011

ட்வென்டி/ ட்வென்டி ரக பரிட்சை - சில ஆலோசனைகள்

ட்வென்டி/ ட்வென்டி கிரிகெட் போட்டிகள் ரொம்ப விறு விறுப்பா இருக்குது. கிரிகெட் போட்டிகள் ரொம்பவும் பிரபலம் ஆகிவிட்டது.



இப்போ பசங்க பரிட்சை என்றாலே வெறுப்பா பாக்குறாங்க. அதுக்காக ஒரு மாற்றத்துக்கு ட்வென்டி/ ட்வென்டி ரகத்துல பரிட்சை நடத்தினா வெறுப்பை பெருமளவு குறைக்கலாம். அதற்காக சில ஆலோசனைகள்

Friday, March 11, 2011

பதிவர்களுக்கு சில பஞ்ச் டயலாக்

பதிவர்கள் பஞ்ச் டயலாக் இல்லமா கஷ்டபடுறதா எனக்கு உளவுத்துறை தகவல் வந்தது. அதுக்காத்தான் இந்த பஞ்ச் பதிவு.
  1. கண்ணா... படிக்கிறத படிக்காம இருக்க முடியாது. படிக்காம இருக்குறத படிக்க முடியாது.
  2. நான் எப்போ எழுதுவேன் எப்படி எழுதுவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா, பப்ளிஷ் பண்ண வேண்டிய நேரத்துல கரைக்ட்டா  எழுதுவேன்.
  3. ஆண்டவன் சொல்றான்.  பதிவு எழுதி முடிக்கிறான்.
  4. என் பதிவு... தனி பதிவு.... சீண்டாத தாங்கமாட்ட
  5. நாலு பேருக்கு பொழுதுபோகலைன்னா.... எந்த மாதிரி பதிவு போட்டாலும் தப்பில்லை. (டோன்ட டோன்ட டோன்ட டோய் டோன்ட டோய் )
  6. ஒருதடவை பப்ளிஷ் பண்ணிடேன்னா  என் பதிவை நானே தொட மாட்டேன்.
  7. எவ்வளவோ போஸ்ட் பண்ணியாச்சி இத பண்ண மாட்டமா...
  8. அசந்தா பதிவு போடுறது உங்க பாலிசி. அசராம கமெண்ட் போடுறது எங்க பாலிசி. 
  9. பிளாக்குறவனும் பிளாக்மெயில் பண்றவனும் ஒண்ணா சேர்ந்ததா சரித்திரமே கிடையாது.
  10.  மிளகுப்பு (என் ப்ளாக் பேருதான்) .... தமிழ்லயே எல்லாருக்கும் பிடிச்ச ஒரே ப்ளாக். (சில கொடுமையான விசயங்கள பொருத்துகணும்)
உங்களுக்கு ஏதாவது பஞ்ச் டயலாக் தெரிஞ்சா சொல்லுங்க அதையும் இதுல சேத்துகிடுவோம்.

Thursday, March 10, 2011

இது ஒரு சராசரி மனிதனுக்காக

வாங்க வணக்கம். சரி ஒரு வாழ்கை தத்துவத்த சொல்லலாம்ன்னு நினைச்சு இந்த பதிவை போட்டிருக்கிறேன். கீழ உள்ளத முழுதாக படிக்கணும். சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லிருக்கான்னு ஓடிரகூடாது.  கடைசில தான் முக்கியமான விசயமே இருக்குது. 

Tuesday, February 15, 2011

குடித்துவிட்டு வண்டி ஓட்டுவது நல்ல பழக்கம்

காலையில் செய்தித்தாள் வாசித்து கொண்டிருக்கும் போது குடித்துவிட்டு வண்டி ஓட்டுவதால் என்னென்ன விபத்துக்கள் நடந்துள்ளன என்ற கணக்கெடுப்பை உலக நிறுவனம் ஒன்று கணித்து வழங்கி இருந்தது எப்படியோ என் கண்களில் விழுந்து விட்டது.

Monday, February 14, 2011

விஜயும் நயன்தாராவும் கொண்டாடிய காதலர் தினம் . கண்டிப்பா படிக்க கூடாது

விஜயும் நயன்தாராவும் கொண்டாடிய காதலர் தினம்,



விஜயும் நயன்தாராவும் சேர்ந்து காதலர் தினம் சிறப்பாக கொண்டாடினார்கள்.


Saturday, February 12, 2011

இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை

இன்றைக்கு காலையில் சாப்பிடும் போது கேட்டவை: (சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் என்ற பாடலின் ராகத்தில் படிக்கவும்)

சத்தம் போடாத பெற்றோர் கேட்டேன்
யுத்தம் செய்யாத சிஸ்டர் கேட்டேன்

கிரெடிட் கார்டு -ன் பின் கோட் கேட்டேன்
டெபிட்டே ஆகாத டெபிட் கார்டு  கேட்டேன்


Thursday, February 3, 2011

இன்றைக்கு இது பெரிய மான பிரச்சனை

 அது என்ன அவ்வளவு பெரிய மான பிரச்சனை? இது பசங்க பிரச்சனை. வேற ஒன்னும் இல்ல பொண்ணுங்க கிட்ட அடிவாங்குறது தாங்க அந்த மான பிரச்சனை. உண்மையாவே... அடிவாங்குறது மான பிரச்சனை இல்லை. கம்மியா அடிவங்குனாதான் கொவ்ரவம் குறைஞ்சி போயிரும்.

Wednesday, January 26, 2011

அடடே ஆச்சர்ய குறி

ஆசிரியர் : டேய், ஏண்டா தரைல உக்காந்து கணக்கு போட்டு கிட்டு இருக்குற?
மாணவன் : நீங்க தானே சொன்னீங்க டேபிள் உபயோகிக்காம கணக்கு போடுன்னு!.


Monday, January 17, 2011

உலகம் அழிய போகுதாம் - பின்விளைவுகள்

இந்தஉலகம் அழிய போகுதுன்னு நிறைய வதந்திகள் மனிதன் தோன்றின காலத்திருந்தே தோன்றியவை. அதுல நான் பிறந்த பிறகு 2000 ம் ஆண்டில் உலகம் அழிய போகுதுன்னு பரவின வதந்தி மிக பிரபலமானது. அது வெறும் வதந்தியாகவே முடிஞ்சி போச்சி. அடுத்து 2012 ம் ஆண்டுன்னு ஒன்னு கிளம்பிருக்குது. இது போதாதுன்னு மே 21, 2011ம் ஆண்டுன்னு ஒன்னும் கிளம்பிருக்குது.

இது போன்ற விசங்களினால் சில பின்விளைவுகள் ஏற்படுது அததான் இப்போ உங்க கிட்ட சொல்லபோறேன். இப்போ இருந்து கொஞ்சம் பின்னாடி ஒரு 11 வருடம் சென்றால் 1999 நான் அப்பொழுது 7-ம் வகுப்பு படிச்சிட்டு இருந்தேன். 2000 ம் ஆண்டு தொடக்கத்தில் உலகம் அழிய போகுதுன்னு பரவின வதந்தி எங்க பள்ளியில ரொம்ப பிரபலமானது. 1999 டிசம்பர் மாதமும் வந்துருச்சி அப்போதான் எங்களுக்கு அரையாண்டு பரீட்சை அப்போ எங்க வகுப்பறையில் ஒரு கூட்டம் 2000 தில் தான் தான் உலகம் அழிய போகுதே நாம எதுக்குயா படிக்கணும் அப்படின்னு சொல்லிட்டு சந்தோசமா திரிஞ்சிட்டு இருந்தது.
அப்படியே அந்த பரிட்சையும் ஓபி அடிச்சிட்டாங்க. ஆனால் அவங்க நினைச்ச மாதிரி எதுவுமே நடக்கல. விடுமுறைக்கு பின் பரிட்சையில் முட்டை மதிப்பெண் வங்கி ஆசிரியர் கிட்ட அடிவாங்கினது தான் மிச்சம்.


சரி சின்ன பசங்க தான் அப்படி இருக்குறாங்கன்னு பாத்தா பெரியவங்க அதுக்கு மேல பண்ணிருக்காங்க. எனக்கு தெரிஞ்ச பக்கத்து வீட்டு மாமா என்ன பண்ணாருன்னா. 2000 தில் உலகம் அழிஞ்சிரும் அதுனால வாழ்க்கைய அதுக்கு முன்னாடி அனுபவிக்கனும் அப்படின்னு லட்ச கணக்கில் கடன் வாங்கி வாழ்க்கைய அனுபவிசிருக்காரு. பாவம் இன்னும் அந்த கடனை அடைச்சிக்கிட்டு இருக்காருன்னா பாத்துகோங்க.

இதெல்லாம் என் கண் முன்னால் நடந்தது நான் எழுதிட்டேன். இன்னும் எத்தனை தெரியாமல் நடந்துருக்குதோ தெரியல. உலகம் இன்னைக்கு அழியுதோ நாளைக்கு அழியுதோ உங்க கடமையை மறக்காம செஞ்சுருங்க. அம்புட்டு தான்.

எப்போ பாத்தாலும் மொக்கையே போடுரயே என கேட்ட பல நண்பர்களுக்கு இந்த பதிவு ஒரு மரண அடியாக இருக்கும் என நம்புகிறேன்.

கீழபாருங்க  Voting Widgets தெரியும். தெரியலன்னா உங்க monitor ஐ நல்லா தொடச்சிட்டு பாருங்க. இப்போ தெரியுதா? ஒரு குத்து குத்திட்டு போய்டே இருங்க.

Sunday, January 16, 2011

உடைகழைப்பும் உங்கள் குணாதிசியமும்

நீங்க டிரஸ் கழட்டும் முறையை (Clothe Removology) வைத்து உங்கள் குணாதிசியத்தை கண்டு பிடிச்சிரலாம். இதை கண்டுபிடிச்சது எவன்னு தெரியல. இது ஆண் பெண் எல்லாருக்கும் பொருந்தும்.

டிரெஸ்ஸை கழட்டி கண்ட இடத்தில் எறிபவரா நீங்கள், நீங்கள் எல்லோரிடமும் சுலபமாக நண்பர்களாகி விடுவீர்கள். எதையுமே பொறுமையா யோசிச்சி முடிவு எடுப்பீங்க. உங்க வீட்ல  உள்ள ஆட்கள் உங்க அறையை பத்தி, "என்ன இங்க ஏதும் புயல் வீச்சிச்சா?" அப்படின்னு கூட கேட்கலாம். ஆனால், மத்தவங்க நம்பள பத்தி என்ன நினைப்பார்கள் என்று கவலை பட மாட்டீர்கள். இது ங்க சந்தோசமாவும் சுதந்திரமாவும் இருப்பீர்கள்.

Saturday, January 15, 2011

கல்லு ஒன்னு மாங்கா ரெண்டு

அதாவது நேற்று ஒரு கனவு அத தான் உங்களுக்கு சொல்ல போறேன். அது ஏற்கனவே என்னோட சின்ன வயசுல யாரோ சொன்ன கதை தான் இது. அததான் இப்போ உருட்டி திரட்டி சொல்லபோறேன்.

அதாவது நானும் என்னோட Program Manger ம் ரயில்ல மும்பை போய்கிட்டு இருக்கோம். ரயில்ல ஏறதுக்கு முன்னாடியே நம்ம கோச்ல எத்தனை பிகருங்க இருக்குதுன்னு List பாக்குறது வழக்கம். கனவுங்கரதுனால வழக்கத்த விட முடியுமா என்ன?  ஏதோ கொஞ்சம் பிகருங்க இருந்தது.

அதுல பாருங்க எனக்கும் PM க்கும் பக்கத்து சீட் தான். ஆனா என்னோட சீட்க்கு எதிர் சீட்ல ஒரு சூப்பர் பிகரு அவுங்க பாட்டிமா கூட வந்து உகாந்துருந்தா. நானும் ரொம்ப நேரமா அந்த பிகரையே பாத்துட்டு இருந்தேன். அந்த பிகரும் என்னையே பாத்துகிட்டு இருந்தா. ரெண்டு பேரும் மாறி மாறி நூல் விட்டுகிட்டு இருந்தோம். கொஞ்சம் கொஞ்சம் சிக்னல் பரிமாறிகிட்டோம்.

Monday, January 10, 2011

கமகம சமையல் செப் மொக்கைசாமி

நானும் என்னோட நண்பர்களும் ஒரு உயிர்தர உணவகத்துக்கு ஒரு பார்ட்டிக்கு போயிருந்தோம். அங்கே சாப்பாடு ரொம்ப அருமையான மனத்தோட இருந்தது. திடீர்ன்னு அங்கே செப் மொக்கைசாமியை பார்த்தேன் அவரு என்னோட நண்பன் தான். அவர் தான் அந்த உணவத்தோட சீப் குக்.

செப் மொக்கைசாமி, எப்படி இருக்க? உங்கவீட்டு பக்கத்துல கேரள குட்டி எப்படி இருக்கா? அப்படி இப்படி விசாரித்து பேசிகிட்டு இருந்தோம். ஏன் இங்க உணவுகள் எல்லாமே அற்ப்புத மனத்துடன் இருக்குதுன்னு அவன்கிட்ட கேட்டேன்.

Saturday, January 8, 2011

நீங்கள் புத்திசாலியா?

எத்தனை நாளுக்கு தான் மொக்கை பதிவை எழுதுவது ஒரு மாற்றத்துக்காக நீங்க புத்திசாலியான்னு சோதிச்சி பாக்க போறேன். ஒன்னும் இல்ல ரெண்டே ரெண்டு கேள்விதான் கொஞ்சம் யோசித்து பதில் சொல்லுங்க.

ஒன்னாவது கேள்வி:

ஒரு அறை அதற்கு ஒரே ஒரு கதவு கதவை மூடிட்டா ஒரு சிறிய வெளிச்சம் கூட அந்த அறைக்கு உள்ளேயோ வெளியவோ போகாது. அந்த அறைக்கு உள்ள ஒரே ஒரு பல்பு.

Monday, January 3, 2011

மல்லிகைபூ ரசம் வழங்குபவர் செப்.மொக்கைசாமி

வணக்கம் நான் தான் செப் மொக்கைசாமியோட நண்பன். அவருக்கு சமையல் மேல ரொம்பவும் தான் காதல். செப்.மொக்கைசாமி பத்தி அவரே எழுதுனா அது அவருக்கு அவமானம் அதான் அவர பத்தி நானே எழுதுறேன்.

செப்.மொக்கைசாமி பத்தி சொல்லனும்னா அவர் பேர பாத்து இவரு மொக்கைன்னு நினைச்சிராதீங்க. அவரு சமயைல்கலாவள்ளவர். இவரு புதுசா யாருமே முயற்சி செய்து பக்காதா அசத்தலான ரெசிபி மட்டும் தான் செய்வாரு. பிகருங்க விசியத்துல அவரு ரொம்ப கெட்டிக்காரர்.