Thursday, November 10, 2011

டாக்டர்கள் காதலித்தால் - கவிதை தொகுப்பு

டாக்டர்கள் காதலித்தால் அவர்கள் கவிதை எப்படி இருக்கும்? இதோ இப்படி தான் இருக்கும்.

என் இதயத்தின் எக்ஸ்-ரே ரிப்போர்ட் -  உன் புகைபடம்!!

உடலில் உள்ள செல்கள் அனைத்திலும்  உன் அன்பை செலுத்தி என்னை வாழவைகிறாய் நீ!!

கத்தி இன்றி ரெத்தம் இன்றி என்னுள் இதயமாற்று அறுவை சிகிச்சை செய்தவள் நீ!

நீ நர்ஸாக இருந்தாலும் உன்னை என் இதயமென்னும் பர்ஸில் வைத்து தைத்திருகிறேன்!



 
இதயம் பார்கிறது, விழிகள் பேசுகிறது, உதடுகள் கேட்கிறது. ஒவ்வொரு உறுப்பும் அவற்றிற்கு மாறான பணியை செய்கிறதே! இது தான் காதல்நோயின் அறிகுறியோ!!

வெளிப்படுத்தபடாத காதல், சிரிஞ்சில் உள்ள மருந்தை போன்றது. வெளியே வரவில்லை என்றால் விரைவில் எக்ஸ்பயரி ஆகிவிடும்.

இதயதானம் வேண்டி உனக்கொரு கடிதம் எழுதினேன், என் இரத்தத்தை தானமாக்கி!!


1 comment:

Post a Comment