Wednesday, December 14, 2011

காதல் - ஒரு களஞ்சியம்

காதலர்கள் சில விஷயங்கள் செய்யும் போது ஏன் இப்படி எல்லாம் பண்றாங்கன்னு உங்களுக்கு தோனலாம்.  ஆனா, எல்லாத்துக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கு அத நீங்க எல்லாரும் தெரிஞ்சிக்கனும். 

காதலர்கள் ஏன் ஒரே ஐஸ்கிரீம் வாங்கி ரெண்டு பேரும் சாப்டுறாங்க? 
இந்த ஐஸ்கிரீம் மாதிரியே வாழ்க்கைல வர்ற சுகதுக்கங்களையும் ரெண்டு பேரும் ஷேர் பண்ணிக்கணும் என்ற எண்ணத்தில்.. 

காதலர்கள் ஏன் பைக்ல இடைவெளி இல்லாமல் நெருக்கமா உட்கார்ந்து போறாங்க?
சாலைகளில் வரும் மேடுபள்ளங்கள் போல வாழ்கையில் வரும் எல்லா சூழலிலும் உன் கூட இடைவெளி ஏற்படாம நெருக்கமாவே இருப்பேன் என்ற எண்ணத்தில்..

காதலர்கள் ஏன்  தியேட்டர்ல கடைசி ரோ சீட்ல உக்கறாங்க?
தியேட்டர் என்பது வாழ்க்கை போன்றது. இந்த வாழ்க்கையை கடைசிவரை (அதான் கடைசி ரோ) உன் பக்கத்திலேயே இருந்து நீ அழும்போது கண்ணீரை துடைத்தும், சிரிக்கும் போது உன்னை ரசித்தும் துணையாக இருப்பேன் என்ற எண்ணத்தில்..

காதலர்கள் ஏன் மொபைல்ல இருந்து எப்போ பாரு SMS அனுப்பிகிட்டே இருக்காங்க?
சில விஷயங்கள் வார்த்தையால் பேச கொஞ்சம் ஈகோ தடையா இருக்கலாம். இல்ல கூச்சமா இருக்கலாம். உதாரணதுக்கு மன்னிப்பு  முகத்துக்கு நேர கேக்க முடியாம இருக்கலாம். ஆனா, அத அப்படியே விட்டா காதலே கலாசலா ஆகலாம். SMS அனுப்பி மன்னிப்பு கேட்டுட்டு பிறகு நேர்ல மன்னிப்பு கேக்கும் போது புரிதல் பெருகும். காதல் வளரும்.



காதலர்கள் ஏன் சிறு சிறு பொய் கூறுகிறார்கள்?
எப்பேர்பட்ட அரிச்சந்த்ரன் கூட காதல்னு வந்துட்டா பொய் சொல்லித்தான் ஆகனும். சரி, மேட்டர்கு வரேன். காதலிக்கறவங்க பொய்யை எப்படி மெய்யுனு கண்மூடி தனமா நம்புவாங்களோ அதே போல உன்னுடனான வாழ்க்கை போராட்டத்தில் ஏற்படும் துன்பங்களையும் இன்பங்களாக நம்பனும். அப்படிங்கற ஒரு சம்பர்தாயம் தான்.

காதலிகள் மிஸ்டு கால்கள் மட்டும் ஏன் அடிகிறார்கள்? 
நான் உன்னை அடிச்சா, என்னை திருப்பி அடிக்க கூட உனக்கு மனசு வராது.. அட்லீஸ்ட் நான் அடிச்ச இந்த மிஸ்டு காலுக்கவது பதிலுக்கு ஒரு கால் அடிப்பன்னு ஒரு ஆசைல தான் இந்த மிஸ்டு கால் அடிகிறேன். என்ன சரிதானே, காதலிகளா!!

காதலர்கள் சண்டை போடுறாங்க.. அதுல என்னங்க அர்த்தம் இருக்க முடியும்?
இருக்கு... அர்த்தம் இருக்கு.. "போருக்கு பின் அமைதி" அப்படின்னு ஒரு பழமொழி போப் ஆண்டவர்ல இருந்து போதிதர்மர் வரை சொல்லிருகாங்க... அதை கடைபிடிச்சி.. அந்த அமைதியை அனுபவிபதற்காக..

காதலர்கள் ஏன் காதலர் தினம் கொண்டாடுகிறார்கள்? 
லவ்வுமா நல்வாழ்கையின் ஆரம்பம்ம்ம்.. அஸ்திவாரம்ம்ம்... அப்படின்னு சூப்பர் ஸ்டார்ரே சொல்லிருகாரு. அதுக்கு ஒரு தினம் கொண்டாடாம விட்டா எப்படிமா..

உங்களுக்கும் பொழுதுபோகலைனா காதல் பத்தி கேள்வி கேளுங்க.. அர்த்தம் கண்டுபிடிச்சி விளையாடலாம்.. வர்டா!! 

Thursday, November 10, 2011

டாக்டர்கள் காதலித்தால் - கவிதை தொகுப்பு

டாக்டர்கள் காதலித்தால் அவர்கள் கவிதை எப்படி இருக்கும்? இதோ இப்படி தான் இருக்கும்.

என் இதயத்தின் எக்ஸ்-ரே ரிப்போர்ட் -  உன் புகைபடம்!!

உடலில் உள்ள செல்கள் அனைத்திலும்  உன் அன்பை செலுத்தி என்னை வாழவைகிறாய் நீ!!

கத்தி இன்றி ரெத்தம் இன்றி என்னுள் இதயமாற்று அறுவை சிகிச்சை செய்தவள் நீ!

நீ நர்ஸாக இருந்தாலும் உன்னை என் இதயமென்னும் பர்ஸில் வைத்து தைத்திருகிறேன்!



 
இதயம் பார்கிறது, விழிகள் பேசுகிறது, உதடுகள் கேட்கிறது. ஒவ்வொரு உறுப்பும் அவற்றிற்கு மாறான பணியை செய்கிறதே! இது தான் காதல்நோயின் அறிகுறியோ!!

வெளிப்படுத்தபடாத காதல், சிரிஞ்சில் உள்ள மருந்தை போன்றது. வெளியே வரவில்லை என்றால் விரைவில் எக்ஸ்பயரி ஆகிவிடும்.

இதயதானம் வேண்டி உனக்கொரு கடிதம் எழுதினேன், என் இரத்தத்தை தானமாக்கி!!


Friday, October 28, 2011

நான்சென்ஸ் தத்துவங்கள் - படித்து பயனுறுக

வாழ்க்கைக்கு தேவையில்லாத நான்சென்ஸ் தத்துவங்கள். படித்து பயனுறுக!

காஞ்ச மரத்தை உழுக்கினாலும் அதிலிருந்து  இலைகள் உதிர்வதில்லை.

பக்கத்துக்கு வீட்டு பிகர் ஆர்ம்'ஸ் காட்டினாலும் அசருவது இல்லை.

சுத்தாத காத்தாடி காற்று தருவதில்லை.

உருகிய ஐஸ்கிரீம் மீண்டும் உருகுவது இல்லை.

ஜூஸ் மீண்டும் பழம் ஆவதில்லை, நுரை மீண்டும் சோப்பு ஆவதில்லை. 

மழைதரும் மேகம் மண்ணை தொடுவதில்லை.

குறி பார்த்து தலையில் எச்சம் போடும் காக்கா, அதற்கு ஸ்பெஷல் ட்ரைனிங் எடுப்பதில்லை.

இதேபோல நீங்க ஒன்னு மட்டும் நல்லா புரிஞ்சிக்கனும்... இந்த பதிவுல பயன் உருற அளவுக்கு ஒன்னும் உருப்படியா இல்லை.

Thursday, October 13, 2011

முதல் திருமணம் - படிபவர்களுக்கு தலைவலி இலவசம்


தலைப்ப பாத்துட்டு இலக்கிய இலக்கண பண்டைய காப்பிய மேட்டர் எதாச்சும் இருக்கும்னு வந்தீங்களா! உங்க ஜட்ஜ்மென்ட் ரொம்ப தப்பு! இந்த பதிவுல எனக்கு எப்படி முதல் திருமணம் நடந்ததுன்னு சொல்ல போறேன்.  ஆனா, நானும் இன்னும் பிரம்மச்சாரி தாங்க. கிளைமாக்ஸ் கொஞ்சம் செண்டிமெண்ட்டா இருக்கும் நீங்க அழக்கூடாது.

நான் சென்னையில் வலதுகால் வைத்த அந்த நாட்கள்ல இருந்து சொல்ல ஆரம்பிக்கறேன். சுமார் ஒரு 4 வருஷத்துக்கு முன்னாடி சென்னை ரயில்வே ஸ்டேஷனில் ஒரு சிங்கம் சுத்திட்டு இருந்ததுன்னு பிரபல பத்திரிக்கை தலைப்பு செய்தி வந்தது. உங்களுக்கு எல்லாம் அது மறந்திருக்கலாம். எனக்கு அது நல்லா நியாபகம் இருக்கு. நீங்களே சொல்லுங்க அந்த சிங்கம் அத எப்படிங்க மறக்கும்.  ஸ்டேஷன் விட்டு வெளிய வந்ததும் கலைந்திருந்த தலைய சூறாவளி வந்து சுத்தம் பண்ணிட்டு போச்சு... சரி சரி.. திரைகதை எல்லாம் சொன்னா பக்கம் பக்கமா போயிரும் படிக்கற நீங்க பாவம்னு நினைச்சி கதைய மட்டும் சொல்றேன். 

நான் வந்து 23 வது நாள் "வேலைக்கு ஆள்தேவை" பேப்பரில் இந்த விளம்பரத்தை பார்த்தேன். உடனே போன் பண்ணினேன். கிளம்பி அந்த டார்கெட்கும் போய் சேர்ந்தேன். அங்கதான் அந்த தேவதைய முதல் முறையா பாத்தேன். ச.. என்ன ஒரு அழகு.. இது கண்ணா இல்ல ஆளை பார்வைலையே சுடற கன்னா.. கட்டினா இவளை தான் கட்டிக்கனும்ன்னு வழக்கமான  டயலாக் ஒன்னு மண்டைல ஓடிட்டே இருந்தது. கடைசில தான் தெரிஞ்சது அவங்க தான் என்னை இண்டர்வியூவ் பண்ண போற HR ன்னு. உனக்கு கொடுத்து வச்சது அவ்ளோ தான்னு நினச்சிட்டு நல்ல பிள்ளையா இண்டர்வியூவ் முடிச்சிட்டு சோகமா போய்டேன்.

சில நாட்கள் கழிந்தது. நானும் அவளை மறந்துட்டேன், ஒரு நாள் அவளே எனக்கு போன் பண்ணி எங்கிட்ட பேசினா என் ரெஸ்யூம்ல இருந்து என் நம்பர் எடுத்திருப்பா போல கள்ளி!!!. நான் கொஞ்சம் பெர்சனாலிட்டியான பையன் தான் என்று இங்கு சொல்ல கடமை பட்டிருக்கிறேன். அப்படியே நான் அவளுக்கு போன் பண்ணி பேச ஆரம்பிச்சேன். நான் பேச அவ பேச இப்படியே ரெண்டுநாள் கொஞ்சம் பேசிட்டே இருந்தோம். 

அடுத்த நாள்  எனக்கு முதல் கல்யாணம் நடந்துச்சு. அந்த கதைய தெரிஞ்சிக்க  மேல படிங்க. அன்னைக்கு காலைல என்னை அவ ஆபீஸ் வர சொன்னா. நானும் அவள பார்க்க சந்தோசமா போனேன். போனதும் ஆபர் லெட்டர் கொடுத்து வேலைல சேர சொல்லிடாங்க. அந்த வேலை தான் என் முதல் மனைவி. அத தான் நான் முதல கல்யாணம் பண்ணிகிட்டேன்!!!!!! இங்கிலீஷ் படம் மாதிரி கதைல என்ன ஒரு ட்விஸ்ட் இல்ல. எழுதும் போது எனக்கே கண்ணீர் வந்துட்டு  ரொம்ப செண்டிமெண்ட் இல்லையா, அதான்.

பின்குறிப்பு: நானும் HR ம் போன்ல பேசிட்டு இருந்தோம்னு சொன்னேன் என்ன பேசினோம்னு  சொல்லாம விட்டுட்டேன் . வேற ஒன்னும் இல்ல வேலைய பத்தி தான். இத முதல்லையே சொல்லிருந்தா கதைல ஒரு விறுவிறுப்பு இருந்திருக்காது.


Wednesday, October 12, 2011

பில்கேட்ஸின் மாப்பிள்ளை ஆவது எப்படி?

பில்கேட்ஸின் மாப்பிள்ளை ஆவது என்ன சாதாரண விசயமா அவர மாதிரியே நாமளும் கஷ்டப்பட்டு யோசிச்சா தானே சக்ஸஸ் பண்ணமுடியும்.  எப்படியாவது பில்கேட்ஸ் மாப்பிள்ளை ஆகிறலாம்ன்னு ஷேக்ஸ்பியர் ஹாம்லெட்டோட ஏழாவது அத்யாயம்ல இருந்து எட்டாவது குறளை எடுத்து கூகிள்ல கொஞ்சம் விவரங்களை தேடி பிடிச்சி ஒரு மாஸ்டர் பிளான் ரெடி பண்ணிருக்கேன். இந்த பிளான் ரொம்ப ரகசியமா இருக்கோனும்.. இல்ல பிளாப் ஆகிரும். கண்டிப்பா இது பில்கேட்ஸ்க்கு தெரியகூடாது.



பிளான்;
பில்கேட்ஸ் கிட்ட போய் அவர் பொண்ண என்னக்கு கட்டி வைங்கன்னு கேப்பேன்.. அவர் கண்டிப்பா மாட்டேன்னு தான் சொல்லுவாரு. என்ன இருந்தாலும் அவரும் ஒரு பொண்ண பெத்தவரு தானே! நான் வேர்ல்ட் பேங்க் CEO ன்னு சொல்லுவேன் அப்போ அவர் சந்தோசமா ஒத்துப்பாரு.. அவரு கண்டுபிடிசிட்டா? அப்படின்னு நீங்க கேக்கலாம் அங்க தான் மாஸ்டர் பிளான் இருக்கு வேர்ல்ட் பேங்க் போய் என்னை CEO வா அப்பாயன்ட் பண்ணுங்கன்னு சொல்லிருவேன்.. அவங்க கண்டிப்பா மாட்டேன்னு தான் சொல்லுவாங்க. நான் பில்கேட்ஸ் மாப்பிளை  என்னையே அப்பாயன்ட் பண்ண மாட்டியான்னு தமிழ் பட வில்லன் ரேஞ்சுக்கு சௌண்டா கேப்பேன் . அவங்களும் மரியாதைல அப்பாயன்ட் பண்ணிருவாங்க.  அப்பறம் என்ன பொண்ணும் கிடைச்சிட்டு வேர்ல்ட் பேங்க் CEO வாவும் ஆயாச்சு.. இனி கெட்டிமேளம் தான்!!

பின்குறிப்பு: 
ஏற்கனவே இந்த SMS எங்களுக்கு வந்துட்டுன்னு யாரும் கமென்ட கூடாது.