Showing posts with label தகவல். Show all posts
Showing posts with label தகவல். Show all posts

Saturday, December 18, 2010

பொது அறிவு தகவல்கள் - 2

மக்கள்தொகை முதல் 12 நாடுகள்:
  1. சீனா 
  2. இந்தியா
  3. அமெரிக்கா
  4. இந்தோனேசியா 

Tuesday, December 7, 2010

கவலைமறக்க கணிப்பொறி போதும்....

நீங்க உங்க வாழ்க்கைல தேவை இல்லாத சில விசியங்கள போட்டு குழப்பிகிட்டு உங்க உடல் நலத்தை கெடுத்துட்டு இருப்பீங்க. அதுக்கு கணிப்பொறி மூலம் ஒரு தீர்வு நான் சொல்றேன்.  உங்களுக்கு எப்பல்லாம் கஷ்டமா இருக்குதோ அப்போ இந்த செய்முறை செய்தலே போதும்.

Monday, December 6, 2010

அதிக சந்தோஷமே தூக்கத்தில் தான் - ஆய்வில் தகவல்

ஒருவரின் வாழ்க்கையில், இரவு நேரம் நன்றாக தூங்குவதே அதிகளவு சந்தோஷத்தை அளிப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. பிரிட்டன் நாட்டை சேர்ந்த 3,000 பேரிடம் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இதில், ஒருவரின் வாழ்க்கையில் அதிகளவு சந்தோஷம் தரும் விஷயம் எது என்று கேட்கப்பட்டது. இதில், ஒரு நாளின் நெருக்கடிகள் அனைத்தையும் மறந்து இரவு நன்றாக தூங்கி, மறுநாள் மிகவும் புத்துணர்ச்சியுடன் எழுந்திருப்பதே அதிகளவு சந்தோஷத்தை தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, பாக்கெட்டில் எப்போதும், பணம் இருப்பது அதிக சந்தோஷத்தை தரும் என, சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.


http://savoirbeds.co.uk/Images/the_importance_of_sleep.jpg


இதுகுறித்து, டெலிகிராப் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி: வாழ்க்கையில் அதிக சந்தோஷத்தை தருவது எது என்ற கேள்விக்கு, இரவு நன்றாக தூங்குவது என்பது முதலிடத் தையும், பாக்கெட்டில் பணம் இருப்பது இரண்டாம் இடத்தையும், படுக்கையில் துணையை கட்டிப்பிடிப்பது என்பது மூன்றாவது இடத்தையும், அழுகையுடன் சிரிப்பது நான்காவது இடத்தையும் பிடித்துள்ளது. இவ்வாறு அந்த பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, பிரிட்டனை சேர்ந்த சூப் நிறுவனத்தை சேர்ந்த ராப் ஸ்டாசி என்பவர் கூறுகையில்,"ஒரு நாள் முழுவதும் கடினமாக உழைத்த பின், படுக்கைக்கு சென்று ரிலாக்ஸ் செய்வதால் கிடைக்கும் உணர்வே அதிகளவு சந்தோஷத்தை கொடுக்கும்!!!

பொது அறிவு தகவல்கள் - 1

மனித மூளையில் நினைவாற்றலுக்காக பத்தாயிரம் கோடி செல்கள் உள்ளன.

பிரஷ் டர்க்கி என்ற பறவையின் குஞ்சு முட்டையில் இருந்து வெளி வந்தவுடன் உடனே பறக்கத் துவங்கிவிடும்.

மொராக்கோ நாட்டில் உள்ள கோஸ்லியா என்ற வகை ஆடுகள் மரத்தில் ஏறி இலைகளை பறித்து உண்ணும்.

குரங்கின் மூளை கீழ் பகுதி மூளை, மேல் பகுதி மூளை என இரு பகுதிகளாக இருக்கிறது.

எறும்புகள் நூறு நாட்கள் வரை இரையில்லாமல் உயிர் வாழுமாம்.

ஸ்விப்ட் என்ற பறவை மணிக்கு 170 கி.மீ. வேகத்தில் பறக்கும்.

நீரை உறிஞ்சிக் குடிக்கும் பறவை புறா.

ஒரே சமயத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகளை இடும் பறவை நெருப்புக் கோழி.

வெட்டுக்கிளியை வேட்டையாடும் பறவை மைனா.

கூடுகட்டி வசிக்கும் பாம்பு ராஜநாகம்.

அணலி எனற பாம்பின் தலை முக்கோண வடிவில் இருக்கும்.

‌சி‌ட்டு‌க்குரு‌வி‌யி‌ன் இதய‌ம் ‌நி‌மிட‌த்‌தி‌ற்கு 1,000 முறை துடி‌க்கு‌ம்.

எறு‌ம்பு த‌ன் எடையை‌ப் போல 50 மட‌ங்கு எடையை இழு‌க்கு‌ம் ‌திற‌ன் கொ‌ண்டது.

ஒ‌ட்டக‌ம் சராச‌ரியாக 60 நா‌ட்க‌ள் வரை த‌ண்‌ணீ‌ர் குடி‌க்காம‌ல் இரு‌க்கு‌ம்.

‌தி‌மி‌ங்கல‌த்‌தி‌ற்கு 20 ஆ‌யிர‌ம் ப‌‌ற்க‌ள் வரை முளை‌க்கு‌ம்.

பூனைகளு‌க்கு இ‌னி‌ப்பு‌ச் சுவை தெ‌ரியாது.

ம‌னித உட‌லி‌ல் ‌மிகவு‌ம் கடினமான பகு‌தி ப‌ல்.

இரை‌த் ‌தி‌‌ன்னு‌ம் போது க‌‌ண்‌ணீ‌ர் வடி‌க்கு‌ம் உ‌‌யி‌ரின‌ம் முதலை‌.

இமயமலை‌யி‌ன் 8,000 ‌மீ‌ட்ட‌ர் உயர‌த்‌தி‌ல் கூட ஒரு சாதாரண‌த் தேரை‌யின‌ம் உ‌யி‌ர்வா‌ழ்வதாக க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டு‌ள்ளது.