Tuesday, December 28, 2010

13-ம் நம்பர் ஜாடி

ஒரு ஊர்ல ஒரு நாட்டு வைத்தியர் இருந்து அட்டகாசம் பண்ணிக்கிட்டு இருந்தார்.. அப்போ திடீர்ன்னு ஒரு அதிசய டாக்டர் அந்த ஊருக்கு வந்துட்டாரு.. எதை வேணாலும் குணமாக்குவேன்.. யாரை வேணாலும் சுகமாக்குவேன்னு கலக்க ஆரம்பிச்சுட்டாரு.. நாட்டு வைத்தியர்க்கு யாவாரம் படுத்துடிச்சு.. என்னென்னமோ பண்ணிப் பார்த்தாரு.. வேலைக்கு ஆகலே..!




ஒரு நாள் மாறு வேஷம் போட்டுக்கிட்டு அதிசய டாக்டர்கிட்டெ போயி " டாக்டர் அய்யா..! எனக்கு எதை தின்னாலும் ருசியே தெரிய மாட்டேங்குது.." அப்படின்னாரு.. எந்த மருந்து குடுத்தாலும் குணமாகலேன்னு சொல்லி அதிசய டாக்டர் பேரை ரிப்பேர் ஆக்கலாம்ன்னு அவர் திட்டம். அதிசய டாக்டருக்கு என்ன பண்றதுன்னு தெரியலே.. ரொம்ப யோசிச்சார்.. அப்புறம் உதவியாள்கிட்டே " யப்பா.. அந்த 13 ம் நம்பர் ஜாடியை எடு" ன்னாரு.. அதில இருந்த லேகியத்தை நிறையா வழிச்சு நாட்டு வைத்தியர் வாய்க்குள்ள அப்புனாரு.. நாட்டு வைத்தியர் கொஞ்சம் தின்னு பாத்துட்டு, "தூ… தூ… இது எருமை சாணி.." அப்படின்னு கோபமா கத்தினாரு.. உடனே அதிசய டாக்டர்.. " அட.. உங்களுக்கு ருசி தெரிய ஆரம்பிச்சுருச்சி" ன்னாரு..!

நாட்டு வைத்தியர் அதிசய் டாக்டர் கேட்ட காசை குடுத்துட்டு தலைய தொங்க போட்டுக்கிட்டே திரும்பிட்டாரு.. இருந்தாலும் அவருக்கு தோல்வியை ஒப்புக்க மனசு இல்லே.. மறுபடியும் ஒரு முயற்சி பண்ணலாம்ன்னு ஒரு வாரம் யோசிச்சாரு..

அப்புறம் அதிசய டாக்டர்கிட்டே போயி " டாக்டர்.. எனக்கு பழசெல்லாம் மறந்துடிச்சு.. ஒன்னுமே ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது.." அப்படின்னாரு.. இப்ப அதிசய டாக்டருக்கு குழப்பம்.. என்ன சொன்னாலும் இந்தாளு நினைவு இல்லேம்பான்.. என்னத்த சொல்லி சமாளிக்கறதுன்னு யோசிச்சுட்டே இருந்தாரு.. நாட்டு வைத்தியர்க்கு மனசுக்குள் சந்தோஷம்.. திடீர்ன்னு அதிசய டாக்டர், உதவியாள்ட்ட.." அந்த 13-ம் நம்பர் ஜாடியை எடு" ன்னாரு.. அப்ப கெளம்பி ஓடுனவர்தான் இந்த நாட்டு வைத்தியர்.. எங்க போனாருன்னு இன்னமும் தெரியலே…!!!

கருத்தையும் ஓட்டையும் போடுங்கோ! 

5 comments:

ப.கந்தசாமி said...

எப்படீங்க இப்படியெல்லாம் தோணுது? ரூம் போட்டு யோசிப்பீங்களோ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன் வருகை தரவும்
http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_31.html

Anonymous said...

Wishing u a Fantastic New Year, Moorthy!!!!

Unknown said...

@ரமேஷ் மிக்க நன்றி

@சிவகுமார் Wish you a Very New Year,

ம.தி.சுதா said...

அருமையாக இருக்குங்க.. போட்டுத் தாக்குங்க...

Post a Comment