தலைப்ப பாத்துட்டு இலக்கிய இலக்கண பண்டைய காப்பிய மேட்டர் எதாச்சும் இருக்கும்னு வந்தீங்களா! உங்க ஜட்ஜ்மென்ட் ரொம்ப தப்பு! இந்த பதிவுல எனக்கு எப்படி முதல் திருமணம் நடந்ததுன்னு சொல்ல போறேன். ஆனா, நானும் இன்னும் பிரம்மச்சாரி தாங்க. கிளைமாக்ஸ் கொஞ்சம் செண்டிமெண்ட்டா இருக்கும் நீங்க அழக்கூடாது.
நான் சென்னையில் வலதுகால் வைத்த அந்த நாட்கள்ல இருந்து சொல்ல ஆரம்பிக்கறேன். சுமார் ஒரு 4 வருஷத்துக்கு முன்னாடி சென்னை ரயில்வே ஸ்டேஷனில் ஒரு சிங்கம் சுத்திட்டு இருந்ததுன்னு பிரபல பத்திரிக்கை தலைப்பு செய்தி வந்தது. உங்களுக்கு எல்லாம் அது மறந்திருக்கலாம். எனக்கு அது நல்லா நியாபகம் இருக்கு. நீங்களே சொல்லுங்க அந்த சிங்கம் அத எப்படிங்க மறக்கும். ஸ்டேஷன் விட்டு வெளிய வந்ததும் கலைந்திருந்த தலைய சூறாவளி வந்து சுத்தம் பண்ணிட்டு போச்சு... சரி சரி.. திரைகதை எல்லாம் சொன்னா பக்கம் பக்கமா போயிரும் படிக்கற நீங்க பாவம்னு நினைச்சி கதைய மட்டும் சொல்றேன்.
நான் வந்து 23 வது நாள் "வேலைக்கு ஆள்தேவை" பேப்பரில் இந்த விளம்பரத்தை பார்த்தேன். உடனே போன் பண்ணினேன். கிளம்பி அந்த டார்கெட்கும் போய் சேர்ந்தேன். அங்கதான் அந்த தேவதைய முதல் முறையா பாத்தேன். ச.. என்ன ஒரு அழகு.. இது கண்ணா இல்ல ஆளை பார்வைலையே சுடற கன்னா.. கட்டினா இவளை தான் கட்டிக்கனும்ன்னு வழக்கமான டயலாக் ஒன்னு மண்டைல ஓடிட்டே இருந்தது. கடைசில தான் தெரிஞ்சது அவங்க தான் என்னை இண்டர்வியூவ் பண்ண போற HR ன்னு. உனக்கு கொடுத்து வச்சது அவ்ளோ தான்னு நினச்சிட்டு நல்ல பிள்ளையா இண்டர்வியூவ் முடிச்சிட்டு சோகமா போய்டேன்.
சில நாட்கள் கழிந்தது. நானும் அவளை மறந்துட்டேன், ஒரு நாள் அவளே எனக்கு போன் பண்ணி எங்கிட்ட பேசினா என் ரெஸ்யூம்ல இருந்து என் நம்பர் எடுத்திருப்பா போல கள்ளி!!!. நான் கொஞ்சம் பெர்சனாலிட்டியான பையன் தான் என்று இங்கு சொல்ல கடமை பட்டிருக்கிறேன். அப்படியே நான் அவளுக்கு போன் பண்ணி பேச ஆரம்பிச்சேன். நான் பேச அவ பேச இப்படியே ரெண்டுநாள் கொஞ்சம் பேசிட்டே இருந்தோம்.
அடுத்த நாள் எனக்கு முதல் கல்யாணம் நடந்துச்சு. அந்த கதைய தெரிஞ்சிக்க மேல படிங்க. அன்னைக்கு காலைல என்னை அவ ஆபீஸ் வர சொன்னா. நானும் அவள பார்க்க சந்தோசமா போனேன். போனதும் ஆபர் லெட்டர் கொடுத்து வேலைல சேர சொல்லிடாங்க. அந்த வேலை தான் என் முதல் மனைவி. அத தான் நான் முதல கல்யாணம் பண்ணிகிட்டேன்!!!!!! இங்கிலீஷ் படம் மாதிரி கதைல என்ன ஒரு ட்விஸ்ட் இல்ல. எழுதும் போது எனக்கே கண்ணீர் வந்துட்டு ரொம்ப செண்டிமெண்ட் இல்லையா, அதான்.
பின்குறிப்பு: நானும் HR ம் போன்ல பேசிட்டு இருந்தோம்னு சொன்னேன் என்ன பேசினோம்னு சொல்லாம விட்டுட்டேன் . வேற ஒன்னும் இல்ல வேலைய பத்தி தான். இத முதல்லையே சொல்லிருந்தா கதைல ஒரு விறுவிறுப்பு இருந்திருக்காது.
6 comments:
//இத முதல்லையே சொல்லிருந்தா கதைல ஒரு விறுவிறுப்பு இருந்திருக்காது. ///
இப்பவும் அப்படி எதுவும் இருக்குர போல தெரியலயே..ஹி..ஹி
nan theriyama edha padichetan enne manichedunga saaami
டேய் முடியலடா....விட்டுடு ............
suppar
magane poda chennai ... angey irukkanda oru venai... appidinu engappa adikkadi solluvaru . athu neenga thana anne... ( sabai naagarikam karuthi ithai commentla ezhuthaama en kabalathukkuleye sollikkitten )
அப்படின நானும் சென்னைகு வரனும் பொல இருகு.. இருந்த மனைவி(JஓB) என்ன வெரடி விட்ருசு... என் செல்ல கொயமத்துர் விடு வர மனம் மருகிரது.
www.busybee4u.blogspot.com
Post a Comment