Monday, October 3, 2011

சண்டே குளிக்காதீங்க - இத முதல்ல படிங்க

சண்டே குளிச்சா பல பிரச்சனைகள் லைப்ல வருது என்பது பலர் அறியாத உண்மை.. எப்படின்னு கேட்கிறீங்களா கீழபடிங்க நீங்களே ஒத்துபீங்க.

சண்டே குளிச்சா வெளிய போகலாம்ன்னு தோனுது, வெளிய போன எந்த பிகரையாவது  சைட் அடிக்கலாம்னு தோனுது, சைட் அடிச்சா அப்படியே கொஞ்சம் சிக்னல் காட்டலாம்னு தோனுது, சிக்னல் வந்தா அப்படியே கொஞ்சம் பேசலாம்ன்னு தோனுது, அப்படியே பேச ஆரம்பிச்சா கடலை போடலாம்னு தோனுது, கடலை போட்டா அப்படியே நெக்ஸ்ட் சண்டே ப்ரீயான்னு கேக்க தோனுது, ப்ரீன்னு சொன்னா வெளிய போகலாமான்னு கேக்க தோனுது, எங்க போகலாம்னா பீச்க்கு போகலாம்ன்னு தோனுது, பீச் போன பைக்ல தான் போகனும்னு தோனுது, பைக்ல போன சடன் பிரேக் போடனும்னு தோனுது, அங்க போன அவ ரசிக்கிறதை எல்லாம் நாமளும் ரசிக்கனும்னு தோனுது, அப்படியே ரசிச்சா அதுக்குள்ள டைம் ஆகிடுச்சானு தோனுது, அப்படியே ட்ராப் பண்ணும் போது நெக்ஸ்ட் சண்டே சினிமா போலாமான்னு கேக்க தோனுது, அப்படியே போனாலும் நல்ல ரொமாண்டிக் மூவிக்கு போகலாம்ன்னு தோனுது, அப்படியே மூவி போனாலும் படத்த பாக்காம அவளை பாக்கலாம்னு தோனுது, படம் முடிஞ்சதும் அப்படியே  ஐஸ்கிரீம் பார்லர் போலாம்ன்னு தோனுது, கடைகாரர் நீங்க கேட்ட ப்லேவர் ஒன்னே ஒன்னுதான் இருக்குனு சொல்லனும்னு நினைக்க தோனுது, அவளும் "இட்'ஸ் ஓகே ஒன்ன ரெண்டுபேரும் ஷேர் பண்ணிக்கலாம்"ன்னு சொன்ன நன்னா இருக்கும்னு தோனுது, அப்பறம் அன்னைக்கு நைட் எல்லாம் ஒரே கவிதையா தோனுது, கடைசில இது தான் லவ்வோன்னு தோனுது, அடுத்தநாள் அவகிட்ட ப்ரபோஸ் பண்ணிடலாம்னு தோனுது, ஆனா பாருங்க அவ மட்டும் ஒத்துகிட்டா லைப்லாங்  கஷ்டம்னு மட்டும் தோனவே மாட்டிகுது.



இதெல்லாம் தேவையா? பேசாம சண்டே குளிக்கமா ஒரு ஓரமா மூடிகிட்டு தூங்கினா இந்த பிரச்சனை எல்லாம் வருமா..யோசிங்கபா.. நல்லா யோசிங்க o:

8 comments:

SOWMYA said...

urupadiyaana padhivu. naatukku nanmai payakkum

makkuponnunan said...

enakku ungala udhaikkalaam nu thonudhu.. X(

Mohamed Faaique said...

சண்டே எழுந்திருக்கவே தேவயில்ல பாஸ்

வெளங்காதவன்™ said...

:)

ஹி ஹி ஹி....

வாழ்க!

wilmann said...

டேய் கைல கிடைச்ச செத்த.............

Tirupurvalu said...

Murthy ,

Good thinking .So Sunday don't bath but plz brush my dear friend

anbu said...

oru thundai mattum iduppula kattikittu thiruvannamalaikku vanthirunga ... onnumey thonaathu

Mamathi said...

நான் ரொம்ப ரசிச்சு.. சிரி..சிரி

Post a Comment