Friday, March 11, 2011

பதிவர்களுக்கு சில பஞ்ச் டயலாக்

பதிவர்கள் பஞ்ச் டயலாக் இல்லமா கஷ்டபடுறதா எனக்கு உளவுத்துறை தகவல் வந்தது. அதுக்காத்தான் இந்த பஞ்ச் பதிவு.
  1. கண்ணா... படிக்கிறத படிக்காம இருக்க முடியாது. படிக்காம இருக்குறத படிக்க முடியாது.
  2. நான் எப்போ எழுதுவேன் எப்படி எழுதுவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா, பப்ளிஷ் பண்ண வேண்டிய நேரத்துல கரைக்ட்டா  எழுதுவேன்.
  3. ஆண்டவன் சொல்றான்.  பதிவு எழுதி முடிக்கிறான்.
  4. என் பதிவு... தனி பதிவு.... சீண்டாத தாங்கமாட்ட
  5. நாலு பேருக்கு பொழுதுபோகலைன்னா.... எந்த மாதிரி பதிவு போட்டாலும் தப்பில்லை. (டோன்ட டோன்ட டோன்ட டோய் டோன்ட டோய் )
  6. ஒருதடவை பப்ளிஷ் பண்ணிடேன்னா  என் பதிவை நானே தொட மாட்டேன்.
  7. எவ்வளவோ போஸ்ட் பண்ணியாச்சி இத பண்ண மாட்டமா...
  8. அசந்தா பதிவு போடுறது உங்க பாலிசி. அசராம கமெண்ட் போடுறது எங்க பாலிசி. 
  9. பிளாக்குறவனும் பிளாக்மெயில் பண்றவனும் ஒண்ணா சேர்ந்ததா சரித்திரமே கிடையாது.
  10.  மிளகுப்பு (என் ப்ளாக் பேருதான்) .... தமிழ்லயே எல்லாருக்கும் பிடிச்ச ஒரே ப்ளாக். (சில கொடுமையான விசயங்கள பொருத்துகணும்)
உங்களுக்கு ஏதாவது பஞ்ச் டயலாக் தெரிஞ்சா சொல்லுங்க அதையும் இதுல சேத்துகிடுவோம்.

8 comments:

Yoga.s.FR said...

சாவுற நாள் தெரிஞ்சு போயிட்டா,வாழுற நாள் நரகமாயிடும்!

நையாண்டி நைனா said...

நான் ஒரு பின்னூட்டம் போட்டா நூறு பின்னூட்டம் போட்ட மாதிரி...

ராஜ நடராஜன் said...

பிளாக்குறவனும் பிளாக்மெயில் பண்றவனும் ஒண்ணா சேர்ந்ததா சரித்திரமே கிடையாது.

(தேர்தல் கூட்டணிக்கு ராஜினாமா கடிதம் கொண்டுபோனதுக்கு சொன்னது)

முந்தா நாள்தான் சொல்லி வச்சேன்:)

Anonymous said...

மாப்பு... வைக்காதீங்க ஆப்பு ........... அருமையான பதிவு.. அங்க்க்க்க்க்க் ............

Anonymous said...

ம்..நடக்கட்டும்

பாலா said...

அசந்தா பதிவு போடுறது உங்க பாலிசி. அசராம கமெண்ட் போடுறது எங்க பாலிசி.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

கலக்கல்.

Avargal Unmaigal said...

உங்களுக்கு நல்ல நகைச்சுவை உணர்வு.தொடருங்கள் இதுபோன்ற பதிவுகளை..என்னை சிரிக்க வைத்த உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். (சில பேர் பதிவுகளை திருடி பதிவு போடுகிறார்கள். நான் இதுவரை அது மாதிரி போட்டதில்லை ஆனால் இதை படித்தவுடன் அப்படி செய்ய ஆசை. டோண்ட் வொரி நான் திருட மாட்டேன் நண்பா

Post a Comment