Thursday, August 4, 2011

அன்ப பத்தி எல்லாம் கவிதை - என் நிலைமைய பாத்தீங்களா!!

இந்த பதிவு முழுவதும் அன்பை மையமாக கொண்டு எழுதப்பட்டது..

ரசிகன்
உன் அழகிற்கு ஆயிரம் ரசிகர்கள். உன் அன்பிற்கு நான் மட்டுமே ரசிகன்.

மண்புழு நான்
உன் அழகென்னும் பூவை சுற்றி வரும் தேனீ  நானல்ல. உன் இதயமெனும் வேரில் இதமாய் இருக்கம் மண்புழு நான்.

இதயதராசு
என் இதயதராசில் உன் அன்பிற்கு இணையாக.. அஸ்வர்யாராய், அனுஷ்கா, அமலாபால் இவர்களை வைத்து பார்க்கிறேன். துளியும் உயரவில்லை உன் பக்கம்!!




உன் மூச்சு காற்று
உன் அழகை தொட்டு செல்லும் காற்றை விட, நீ மூச்சாக விட்டு செல்லும் காற்றையே சுவாசிக்க விரும்புகிறேன்.. அது உன் இதயத்தை உரசி வந்ததால்!! 

குழந்தை நீ
இதனை வயதான பின்னும் தவழ்கிறாயே என் இதயத்தில்,  அங்கு என்றுமே  நீ குழந்தை தான் என்பதை மூளை சொல்லி தான் என் இதயத்திற்கு தெரியவேண்டும் என்பதில்லை!!

அழியா காதல்
கண் பார்த்து மனம் தேடுவது முதல் காதல், மனம் பார்த்து கண் தேடுவது கடைசி காதல். அதுவே என்றும் அழியா காதல்!

உறவின் அணிகலன்
நம்மை ஆதாரமாக்கி ஈகோவை சேதாரமாக்கி அன்பை செயகூலியாக்கி செய்யப்படும் விலைமதிப்பற்ற  உறவின் அணிகலனே காதல்!

லப், டப்
இதயம் பேசிய ரெண்டே வார்த்தை லப், டப். மூன்றாவதாக இப்பொழுது இன்னொரு வார்த்தை உன் பெயர்..! 

அன்பு காந்தம்
உன் அன்பென்ன ராட்சத காந்தமா? நான் எங்கிருந்தாலும் என்னை உன் பக்கமாகவே ஈர்க்கிறது..!

8 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

அன்பு நிறைந்து வழியும் கவிதைகள்.

அருமை

முனைவர் இரா.குணசீலன் said...

வாங்க கவிஞரே உங்களை அன்போடு அழைக்கிறேன் கவிதை ஊர்தியை ஓட்டிப்பார்க்க..

http://gunathamizh.blogspot.com/2011/08/blog-post_03.html

Anonymous said...

''...உன் அன்பென்ன ராட்சத காந்தமா? நான் எங்கிருந்தாலும் என்னை உன் பக்கமாகவே ஈர்க்கிறது''..அன்பு மையக் கவிதைகளுக்கு வாழ்த்துகள்...----வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

Unknown said...

முனைவர்.இரா.குணசீலன். வேதா. இலங்காதிலகம்., saro நன்றி..

சமுத்ரா said...

NALLA KAVIDHAI

Chitra said...

அழியா காதல்
கண் பார்த்து மனம் தேடுவது முதல் காதல், மனம் பார்த்து கண் தேடுவது கடைசி காதல். அதுவே என்றும் அழியா காதல்!

...The best. :-)

Mohamed Faaique said...

sooper..

சமுத்ரா said...

:) good one

Post a Comment